Thursday, 21 March 2019

சம்பந்தர்   காலையில்   எழுந்ததும்   எம்பெருமான்   திருவருள்   செய்ததையும்   தான்   அவர்   மேல்   பதிகம்   பாடி   மகிழ்ந்ததையும்   தொண்டர்களிடம்   மகிழ்ச்சியோடு    பகிர்ந்து   கொண்டார் .  தொண்டர்கள்   அதை   கேட்டு    புல்லரித்து   போனார்கள் .  ஐயனின்   பேரன்பு   அவர்களை   பிரமிப்பில்      ஆழ்த்தி யது .     பிறகு   அவர்   அங்கிருந்து   புறப்பட்டு   பக்கத்திலுள்ள   சில   சிவஸ்தலங்களை   சேவித்து   கொண்டு   திரு காளத்தி   சென்றடைந்தார் .   தனது   வலது   பக்கத்தை   கண்ணப்பருக்கு    அளித்த   களத்திநாதரை    மனமுருக   வணங்கினார் .   அங்கிருந்தே   வட   தேசத்திலுள்ள   உத்திர  கைலாசம் ,  கேதாரம் ,  திருக்கோகர்ணம்   முதலான   புண்ணிய      தலங்களை   மனக்கண்ணால்    தரிசித்து   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .   அங்கு  சில   நாள்   தங்கி   பிறகு   திருவொற்றியூர்   வந்தார் .

No comments:

Post a Comment