சம்பந்தர் காலையில் எழுந்ததும் எம்பெருமான் திருவருள் செய்ததையும் தான் அவர் மேல் பதிகம் பாடி மகிழ்ந்ததையும் தொண்டர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் . தொண்டர்கள் அதை கேட்டு புல்லரித்து போனார்கள் . ஐயனின் பேரன்பு அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தி யது . பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு பக்கத்திலுள்ள சில சிவஸ்தலங்களை சேவித்து கொண்டு திரு காளத்தி சென்றடைந்தார் . தனது வலது பக்கத்தை கண்ணப்பருக்கு அளித்த களத்திநாதரை மனமுருக வணங்கினார் . அங்கிருந்தே வட தேசத்திலுள்ள உத்திர கைலாசம் , கேதாரம் , திருக்கோகர்ணம் முதலான புண்ணிய தலங்களை மனக்கண்ணால் தரிசித்து பதிகங்கள் பாடி மகிழ்ந்தார் . அங்கு சில நாள் தங்கி பிறகு திருவொற்றியூர் வந்தார் .
No comments:
Post a Comment