Friday, 1 March 2019

அடியார்களின்   ஆனந்தம்   எல்லை   மீறியது .  சைவம்   மீண்டது   எனும்   ஆரவாரம்    வானை   எட்டியது .  அரசன் ''ஈசனே   முழு   முதற்கடவுள்   என்று   நிரூபணமாகி   விட்டது .  இது   நாள்   வரை   நான்   மதியிழந்து   படுகுழியில்   வீழ்ந்திருந்தேன் .   ஐயனே   இன்று   தங்கள்   கருணையால்   கரையேறி    விட்டேன் ''  என்று    தழுதழுக்க   கூறி   சம்பந்தர்   காலடியில்   வீழ்ந்தார் .  அரசியும்   குலச்சிறையாரும்   இத்தனை   காலமாக   தங்களை   வாட்டிய   வேதனை   நீங்கி   சந்தோஷம்   அடைந்தனர் .   சம்பந்தர்   அங்கிருந்து   புறப்பட்டு   ஆலவாய்   அண்ணலுக்கு   ''விடலாலவாயிலாய் ''   என்ற   பதிகம்   பாடி   தன்   நன்றியை   தெரிவித்து   கொண்டு   தம்   மடத்திற்கு   திரும்பினார் .    வா திலே   தோற்ற   சமணர்களை   அவர்கள்   வாயாலேயே   விதித்த   நிபந்தனையின்படி    மந்திரியார்   கழுவிலேற்றி   தண்டித்தார் .  பாண்டிய   நாட்டில்   மீண்டும்   சைவம்   தழைத்தோங்க   மக்கள்   பக்தியுடன்  எம்பெருமானை   தொழலானார்கள் .

No comments:

Post a Comment