Monday, 18 March 2019

மடத்தில்   வாகீசப்பெருமானும்   காழிப்பிள்ளையும்   பேசிக்கொண்டிருந்த   போது    பிள்ளை   பாண்டிய   நாட்டில்   தம்   அனுபவங்களை   விளக்கி   கூறினார் .   அரச   தம்பதிகளுடன்   தான்   பாண்டிய   நாட்டில்   சிவத்தலங்களை   சேவித்ததை   விளக்கினார் .   அதை   கேட்டு   அப்பர்   பெருமானுக்கு    தானும்   அத்தலங்களை     சேவிக்க    வேண்டுமென்ற   பேரவா   உண்டாயிற்று .   அதேபோல்   சம்பந்தருக்கு    வாகீசர்    சொல்ல   கேட்டு   தொண்டைநாட்டு   தலங்களை   காணவேண்டுமென    ஆவல்   பெருகிற்று .    ஆளுடைப்பிள்ளை   அப்பர்   பெருமானிடம்   விடை     பெற்று   கொண்டு   காவிரி   கரையில்   திருப்பழனம்   திருவையாறு   மற்றும்   சில   தலங்களை   தரிசித்துக்கொண்டு    சீர்காழி   வந்து   சேர்ந்தார் .  வெகு   நாட்களுக்கு   பிறகு    தோணியப்பரை   காணும்   ஆவலுடன்   ஆலயம்   சென்று   மனமார    தரிசித்தார் .   தந்தையிடம்   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவிக்க   தனது   அவாவை   தெரிவித்தார் .   தந்தை   தானும்   கூட   வர   ஆவல்   தெரிவித்தார் .  சம்பந்தர்   மறுத்து   யாகம்   செய்ய   வேண்டிய   அவசியத்தை     கூறி   தோணிபுரத்தில்   தங்கி         இக்கடமைகளை   முடிக்குமாறு   கூறி    அவர்   தம்    தொண்டை   நாட்டு   பயணம்   புறப்பட்டார் .

No comments:

Post a Comment