Monday, 11 March 2019

திருநள்ளார்   சென்று   திரும்பிய   சம்பந்தர்    அடுத்து   திருத்தெளிச்சேரி   சென்று   அங்கு   ஈசனை   சேவித்துக்கொண்டு   வந்தார் .  அடியார்கள்   சிவம்    தழைக்க   செய்த   சிலர் ,   சமணரை   வென்ற   சீர்காழி   பெருமான்   வருகிறார்   என்று    கோஷமிட்டு   கொண்டே   வந்தனர் .   அவர்கள்   பௌத்தர்கள்   வசிக்கும்   பள்ளியை   நெருங்கினர் .  பௌத்தர்கள்   அவர்கள்   அவ்வாறு   கோஷமிடுவதை    ஆக்ஷேபித்தனர் .  வாய்   மூடிக்கொண்டு   செல்ல   வேண்டும் .   இல்லாவிடில்   வேறு   மார்க்கமாக   செல்லும்படி   வற்புறுத்தினர் .   அவர்கள்   தலைவன்   புத்தநந்தி   சிறுவன்தானே   என்று   மிக   அலட்சியமாக   பேசினான் .  சினமடைந்த    சம்பந்தர்   ஐயன்    மேல்   பதிகம்   பாடி   அவன்   இடிவிழ    வேண்டுமென்று   வேண்டினார் .   உடனே  பளிச்சென்று   மின்னல்    தோன்றி    அவர்   தலையை   தாக்கி   அங்கேயே    வீழ்ந்தார் .   மற்றவர்கள்   பயந்து   ஓடிவிட்டன ர.    சம்பந்தர்    பக்கத்தில்   மண்டபத்தில்   பல்லக்கை   இறக்க   சொல்லி   அவர்களை   வாதுக்கு   அழைத்தார் .   சாரிபுத்தன்   என்பவன்    அடியார்களுடன்   வாதத்திற்கு   வந்தா ன் .  சம்பந்தர்    அவர்களுக்கு    அன்பேமயமான    சிவபெருமானின்   பெருமைகளை  எடுத்துரைத்தார் .  அவர்களால்   பிள்ளையாரை    எதிர்த்து   வாதம்   செய்ய     முடியவில்லை .   எல்லோரும்   அவரிடமே   திருநீறு    வாங்கி    பூசிக்கொண்டு   சைவம்   தழுவினர் .

No comments:

Post a Comment