Wednesday, 13 March 2019

பின்னர்    காழிப்பிள்ளை   பௌத்தர்களை   சைவத்தை     தழுவ   செய்த   மன    நிறைவுடன்   திரு க்கடவூர்   சென்று   காலாந்தக   பெருமானை    சேவித்து   கொண்டு   வந்தார் .   அப்போது   திருப்பூந்துருத்தியில்   அப்பர்   பெருமான்    தங்கியிருப்பதாக   கேள்விப்பட்டு    அங்கு    சென்று    அவரை    சேவிக்க    ஆவல்     கொண்டார் .   உடன்   அவரை   பார்க்க   விரைந்தார் .  திருப்பூந்துருத்தி    அடைந்தவுடன்    அப்பர்பெருமான்    எங்கே,எங்கே   என்று   அவலுடன்   வினவினார் .   அப்போது   நாவுக்கரசர்   கீழிருந்து    வெளியே   வந்து   ''இதோ    இருக்கிறேன்   இன்றுதான்    தங்களை    சுமக்கும்   பாக்கியம்     பெற் றேன் .''  என்று   கூறிக்கொண்டே    வந்தார் .   உடனே   சம்பந்தர்    என்னை   இப்பாவத்திற்கு   ஆளாக்கி   விட்டிர்களே   என்று    கூறி   கொண்டு    அவர்    காலில்   விழ   எத்தனித்தார் .   அதற்குள்   அப்பர்    இவர்    காலில்   விழுந்தார் .  இருவரும்   திருமடம்   சென்றனர் .

No comments:

Post a Comment