Monday, 8 January 2018

நந்தனார்   மிக்க   ஏமாற்றமடைந்தார் .  கண்ணீர்   மல்க   ஐயனை   துதித்தார் .ஈசனே   உன்னை   காணும்   பேராவலுடன்   இங்கு   வந்தேனே .  இவ்வாறு   நந்தி   மறைத்து   உன்னை   காணமுடியாத  பாவி   ஆகிவிட்டேன'  என்று   வெகுவாக   அழுது   புலம்பினார் .  பொறுப்பாரா   ஈசர் .  உடனே   நந்திக்கு   பக்தன்   தன்னை   கான்பதற்கு   சற்று   விலகி   இருக்கும்படி   ஆணை   இடுகிறார் .  என்ன  அதிசயம் !  நந்தி   விலகி   பக்தன்   ஈசனை   கண் குளிர   காண   இடமளித்தது .   நந்தனார்   மகிழ்ச்சிக்கு   எல்லையே   இல்லை .    நந்தனார்   மகிழ்ச்சி   வெள்ளத்தில்   மிதந்தார் .    ஐயன்   திருமேனியை   உள்ளம்   குளிர   தரிசித்தார்   ஆனந்த   கூத்தாடினார் .   பக்தியுடன்   பலவாறாக    துதித்தார் .   தனக்கு   இவ்வாறு   கருணை   காட்டிய   ஐயனுக்கு   ஏதாவது   திருப்பணி   செய்ய   ஆவல்   கொண்டார் .  ஆலயத்தின்   பக்கத்தில்   ஒரு   குழி   இருப்பதை   கண்டார் .  அங்கு   ஒரு   திருக்குளம்   தேவை   என்று   எண்ணி   சில   ஆட்களை   வரச்செய்து   உடனே   வேலையை   தொடங்கினார் .    சில   நாட்களில்   வேலை   முடிந்து   அழகிய   திருக்குளம்   உருவானது ..  நந்தனாருக்கு   அளவிலா   மகிழ்ச்சி .  ஊர்   திரும்பினார் .

No comments:

Post a Comment