Wednesday, 24 January 2018

திருக்குறிப்பு   தொண்டர்தம்   அடியார்க்கு   அடியேன் |

தொண்டை   மண்டலத்தில்   உமை   அன்னை   ஐயனை   குறித்து   தவமிருந்து   பிறகு   ஈசனுடன்   கொலுவிருக்கும்   பெருமைமிக்க   தலம்   காஞ்சிபுரம் .  அங்கு   சலவை   தொழில்   செய்யும்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களுக்கு   சேவை   செய்வதை   லட்சியமாக   கொண்டு  இருந்தார் .  அவர்கள்   வஸ்திரங்களை   வெள்ளாவியில்   போட்டு   நன்றாக   சலவை   செய்து   கொடுப்பார் .  அவர்கள்   சொல்வதற்கு   முன்பே   அழுக்கான   உடைகளை   தானே   எடுத்து   சென்று   சலவை   செய்து   கொண்டுவந்து   கொடுப்பார் .  தங்கள்   குறிப்பறிந்து   அவர்   செய்யும்   சேவையால்   மகிழ்ந்து   அவர்கள்   இவருக்கு   திருக்குறிப்பு   தொண்டர்   என்றே   பெயரிட்டனர் .

No comments:

Post a Comment