Tuesday, 16 January 2018

ஈசன்   நந்தனாரின்   கனவில்   தோன்றி   'அன்பனே   நாளை   நீ   நம்மிடம்   வருவாயாக .  இப்பிறவி   நீங்க   வேள்வி   தீயில்   மூழ்கி   எழுந்து   எம்மிடம்   வந்து   சேர் '  என்று   ஆணையிட்டார் .  நந்தனாருக்கு    ஆனந்தம்   தாங்கவில்லை .  பொன்னம்பலவாணனின்   அன்பை   நினைந்து   அவரது   கண்கள்   நீரை   ஆறாய்   பொழிந்தன .  பலவாறு   பாடி   கொண்டாடினார் .  உணர்ச்சிகளை   கட்டுப்படுத்த   முடியாமல்   திணறினார் .
    காலையில்   தில்லைவாழ்   அந்தணர்கள்   ஈசனின்   இப்பெரும்   கருணையை   எண்ணி   பெரிதும்   மகிழ்ந்து   கொண்டாடினர் .    நந்தனை   காண   பெரும்   ஆவல்   கொண்டனர் .  ஈசனின்   கட்டளைப்படி   பெரிய   பள்ளம்   தோண்டி   அதில்   யாக   தீ   மூட்டி   சிறப்பாக   யாகம்   செய்ய   ஏற்பாடு   செய்தனர் .

No comments:

Post a Comment