Thursday, 18 January 2018

பொழுது   புலர்ந்தது .   தில்லை   அந்தணர்கள்   இறைவனின்   கருணையை   எண்ணி   பேரானந்தம்   அடைந்தனர் .  ஈசனின்   இத் தகைய    பேரருளை   பெற்ற   அப்பெருமக னை   காண   பேராவல்   கொண்டு   ஈசனிடம்   சென்று   விடை   பெற்று   கொண்டு   மேளதாளத்துடன்    வேத   கோஷங்களுடனும்   புறப்பட்டு   நந்தனார்   இருக்குமிடம்   விரைந்தனர் .  நந்தன்   தூரத்திலிருந்து   அவர்களை   கண்டதும்  எந்நேரமும்   ஈசனுக்கு   தொண்டு   செய்து   கொண்டே   இருக்கும்   பெரும்   பாக்கியம்   பெற்ற    அவர்களை   அங்கிருந்தே   விழுந்து   வணங்கினார் .     அவர்கள்   எதோ   காரியமாக   வருவதாக   எண்ணி   தள்ளி   நின்று   அவர்களுக்கு   பாதை   விட்டு   விலகி   நின்றார் .  ஆனால்   அவர்கள்   நேரே   வந்து   இவர்   கால்களில்   விழுந்தனர் .  அவர்கள்   ஈசன்   தங்களை   தக்க   மரியாதையுடன்    தன்னிடம்   அழைத்துவர   ஆணை   இட்டுள்ளார் .  தங்களை   அழைத்து   செல்லவே   வந்திருக்கிறோம்   என்றனர் .

No comments:

Post a Comment