பொழுது புலர்ந்தது . தில்லை அந்தணர்கள் இறைவனின் கருணையை எண்ணி பேரானந்தம் அடைந்தனர் . ஈசனின் இத் தகைய பேரருளை பெற்ற அப்பெருமக னை காண பேராவல் கொண்டு ஈசனிடம் சென்று விடை பெற்று கொண்டு மேளதாளத்துடன் வேத கோஷங்களுடனும் புறப்பட்டு நந்தனார் இருக்குமிடம் விரைந்தனர் . நந்தன் தூரத்திலிருந்து அவர்களை கண்டதும் எந்நேரமும் ஈசனுக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கும் பெரும் பாக்கியம் பெற்ற அவர்களை அங்கிருந்தே விழுந்து வணங்கினார் . அவர்கள் எதோ காரியமாக வருவதாக எண்ணி தள்ளி நின்று அவர்களுக்கு பாதை விட்டு விலகி நின்றார் . ஆனால் அவர்கள் நேரே வந்து இவர் கால்களில் விழுந்தனர் . அவர்கள் ஈசன் தங்களை தக்க மரியாதையுடன் தன்னிடம் அழைத்துவர ஆணை இட்டுள்ளார் . தங்களை அழைத்து செல்லவே வந்திருக்கிறோம் என்றனர் .
No comments:
Post a Comment