Sunday, 7 January 2018

ஊதியம்   பெறாமல்   இத்தனை   பொருள்களை   கோயில்களுக்கு   சமர்ப்பிப்பதில்   அவர்   மனம்    மட்டற்ற   மகிழ்ச்சியை   அடையும் .  அவர்   புலையர்   குலத்தினராதலால் ஆலயத்திற்குள்   நுழைய   முடியாது   வாயிலில்   நின்றபடி   நெஞ்சுருகி   கண்ணீர்   மல்க   ஐயனை   மனதார   தொழுவார் .   அவர்   ஆலயத்திற்கு   செய்யும்   இத்தொண்டால்   மகிழ்ந்த   மக்கள்   ஜீவனத்திற்கு   கொஞ்சம்   நிலங்களை   மானியமாக   கொடுத்தனர் .அதில்   செலவு   போக   மிகுதியை   ஆலய   தொண்டிற்கே   செலவு   செய்வார் .  நந்தனார்   இவ்வாறு   பக்கத்திலுள்ள   கோயில்களுக்கும்   இத்தொண்டுகளை   செய்ய    செல்லும்   போது     வைத்திஸ்வரன்   கோயில்   அருகே   உள்ள  திருப்புன்கூர்   ஆலயம்  சென்று   ஈசனை   தரிசிக்க   விரும்பி   அங்கு   சென்றார் .  அங்கு  பெரிய   நந்தி    ஈசனை   மறைத்ததால்   அவரால்   ஈசனை   காண   முடியவில்லை .

No comments:

Post a Comment