Wednesday, 10 January 2018

மனநிறைவுடன்   ஊர்   திரும்பிய   நந்தன்   அக்கம்பக்கத்திலுள்ள   சிவாலயங்களில்   தன்னால்   முடிந்த   திருப்பணிகளை   செய்து   வந்தார் .   அங்கு   மற்றவர்கள்   தில்லை   அம்பலவாணனை   பற்றியும்   அவர்   திருவிளையாடல்களையும்    பெருமையாக   பேசுவதை   கேட்க   கேட்க   தில்லை   செல்ல   வேண்டும்   எனும்   ஆவல்   பெருகியது .  தில்லை   சென்று   நடராஜரை   தரிசிக்க   முடிவு   செய்து   நண்பர்களிடம்   எல்லாம்   தில்லை   போவதாக   சொல்லிக்கொண்டிருந்தார் .  ஆனால்   தனியாக   யோசித்த   போதுதான்      அதன் தடங்கல்கள்   அவருக்கு   புரிந்தது .  தில்லை   சென்று   விடலாம் .  ஆனால்   அம்பலக்கூத்தனின்   ஆலயம்   எத்தனை   பெரியது .   இவனால்   பிறந்த   குலம்   காரணமாக   ஆலயத்தின்   உள்ளே நுழைய   முடியாது .  பிறகு   ஈசனை   தரிசிப்பது   எவ்வாறு ?  இக்கேள்வி   அவரை   நிலைகுலைய   செய்தது .    என்ன   செய்வது ?  எல்லோரிடமும்   நாளை   போகிறேன்  நாளை   போகிறேன் .  என்று   தினமும்   சொல்லி   வந்தார் .  அவருடைய   சிவபக்தியும்   நடராஜரை   காண   அவருக்குள்ள   அளவு   கடந்த   ஆவலும்   யாவரும்   அறிந்ததால்   அவரை   எல்லோரும்   திருநாளைப்போவார்   என்றே   அழைக்கலானார் .

No comments:

Post a Comment