Friday, 19 January 2018

 நந்தனார்   இரவில்   கனவில்   ஈசன்  கட்டளை    இட்டது   நினைவில்   வந்து   மெய்சிலிர்த்து   தன்னை   ஆண்டவன்   அழைக்கிறான்   என்கிற   அவர்கள்   சொன்னது   அவரை   ஆனந்தத்தின்   எல்லைக்கே   கூட்டி   சென்றது .  ஐயன்   கருணையை   நினைந்து    மெய்   உருக   த்யானம்  செய்து   கொண்டு   அவர்களை   பின்தொடர்ந்தார்.  உணர்ச்சி   மேலீட்டால்   தடுமாறி   விழுந்து   எழுந்து   ஓடினார் .  தென்புறத்து   திருவாயிலில்   யாக   தீ   கொழுந்து   விட்டு   எரிந்து   கொண்டிருந்தது .  அவரை   புனித   படுத்த   செய்த   யாகதீ   அல்லவா ?  ஈசனை   வாயார     துதித்த படியே   நந்தனார்   யாக   குழியை   வலம்   வந்து   யாகத்தீயில்   இறங்கினார் .  வாத்திய   கோஷங்களும்   மக்களின்   வாழ்த்து   கோஷங்களும்   விண்ணை   முட்டின .   நந்தனார்   கூப்பிய   கரங்களுடன்   எதிர்புறம்   வெளியேறினார் .  தேவதுந்துபி   முழங்கியது .  விண்ணவர்   மலர்மாரி   பொழிந்தனர் .  வெளிப்பட்ட   நந்தனார்   புதிய  மனிதராய்   தலையில்   ஜடாமுடியும் ,  கழுத்தில்   ருத்திராக்ஷ   மாலையும்.,  நெற்றியில்   திருநீறு   பளிச்சிட   மார்பில்   பூணுலும்   பூண்டவராக   சிவனடியாராக   வெளிவந்தார் .  பக்தர்களின்   சந்தோஷ   ஆரவாரம்   வானை   எட்டியது .  அந்தணர்கள்   அவரை   சகல   மரியாதையுடன்   அம்பலவாணன்   சன்னதிக்கு   அழைத்து   சென்றனர் .   நந்தனார்   பக்தி  பரவசத்துடன்   ஐயனை   துதித்தபடியே   அவருள்   ஐக்கியமானார் .  

No comments:

Post a Comment