Monday, 29 January 2018

சிவனடியார்   திருக்குறிப்பு   தொண்டரை   பார்த்து   என்ன   வேண்டும்   என   வினவினார் .  தொண்டர்   சுவாமி   ஒரு   சிவத்தொண்டர்   இவ்விதம்   அழுக்கு   துண்டை   போர்த்தி   இருப்பது   மிகுந்த   வேதனை   அளிக்கிறது .   அதை   சுத்தமாக   துவைத்து   நொடியில்   தந்து   விடுகிறேன்   என்று   பணிவோடு   கேட்டான் .  சிவனடியாராக    வந்திருந்த   ஈசன்   'அப்பனே   ஒன்றும்   வேண்டாம் .  அழுக்கோ   கந்தையோ   இருப்பது   இது   ஒரு   துண்டையும்   உன்னிடம்   கொடுத்து   விட்டு   நான்   என்ன   செய்வது ?  மழை   வரும்போலிருக்கிறது .  இப்படியே   இருந்து  விட்டு   போகட்டும் '  என்று   மறுத்து   விட்டார் .  ஆனால்   தொண்டர்   மனம்   கேட்கவில்லை .   மன்னிக்க   வேண்டும்   ஸ்வாமி   என்மனம்   கேட்கவில்லை   ஒரே   நொடியில்   தோய்த்து   காயவைத்து   கொடுக்கிறேன்   ஸ்வாமி   என்று   கெஞ்சினான் .  அவர்   எத்தனை   மறுத்து   சொல்லியும்   அவன்   கேட்பதாயில்லை .  சரி   நான்   வரும்போது   துண்டு   தயாராக   இருக்க   வேண்டும் .  என்று   சொல்லி   அரை   மனதுடன்     கொடுத்தார் .

No comments:

Post a Comment