ருத்திராபசுபதியார் ருத்திரரை இடைவிடாது ஜெபித்தே சிவனடி சேர்ந்தார் . சோழ நாட்டில் திருத்தலையூர் எனுமிடத்தில் பசுபதி என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி . ஈசனுக்கு மிக பிரிதியான ருத்திரம் தினமும் ஜபித்து வந்தார் . அதனால் அவருக்கு ருத்திர பசுபதி என்ற பெயர் வழங்கலாயிற்று . மிகவும் போற்றப்படுவதும் ஈசனுக்கு மிகவும் ப்ரியமானதுமான ருத்திரத்தை தினமும் காலை முதல் மாலைவரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு கைகளை தலை மேல் கூப்பிக்கொண்டு ஜெபிப்பார் . இச்செயலால் மிக மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவரை தன்னிடம் சேர்த்துக்கொண்டார் .
No comments:
Post a Comment