Thursday, 4 January 2018

ருத்திராபசுபதியார்   ருத்திரரை   இடைவிடாது   ஜெபித்தே   சிவனடி   சேர்ந்தார் .  சோழ   நாட்டில்   திருத்தலையூர்   எனுமிடத்தில்   பசுபதி    என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   சிவபெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி .  ஈசனுக்கு   மிக   பிரிதியான   ருத்திரம்  தினமும்   ஜபித்து   வந்தார் .  அதனால்   அவருக்கு   ருத்திர   பசுபதி   என்ற   பெயர்   வழங்கலாயிற்று .  மிகவும்  போற்றப்படுவதும்   ஈசனுக்கு   மிகவும்   ப்ரியமானதுமான   ருத்திரத்தை   தினமும்   காலை   முதல்   மாலைவரை   குளத்தில்     கழுத்தளவு   நீரில்   நின்று   கொண்டு   கைகளை   தலை   மேல்   கூப்பிக்கொண்டு   ஜெபிப்பார் .  இச்செயலால்   மிக   மகிழ்ச்சி   அடைந்த   சிவபெருமான்   அவரை   தன்னிடம்   சேர்த்துக்கொண்டார் .

No comments:

Post a Comment