Tuesday, 30 January 2018

தொண்டர்   மகிழ்ச்சியுடன்   அதை   பெற்றுக்கொண்டு   அதை   வெள்ளாவியில்   போட்டு   பிறகு   மற்ற   பணிகளுக்கு   சென்று   விட்டார் .  பிறகு   மறந்து   போனார் .  மறுபடி   நினைவு   வந்தபோது   மதியம்   ஆகிவிட்டது .  அவசரமாக   அதை   கசக்கி   பிழிந்து   உலர்த்த   போனார் .  அப்போது   திடிரென்று   கறுத்த   மேகங்கள்   சூழ்ந்தன .  அவர்   நிலைகுலைந்து   போனார் .  மழை   வந்தால்   என்ன   செய்வது   என்று   எண்ணும்போதே   மழை   கொட்ட   ஆரம்பித்தது .  அவருக்கு  தன்னையே   மன்னித்து   கொள்ள   முடியவில்லை.  புலம்பினார்   தான்   செய்தது   பெரும்   பிழை   மன்னிக்க   முடியாதது   என்று   மன   உறுத்தல்   தாளவில்லை .  அவர்   அத்தனை   சொல்லியும்   கேளாமல்   வாங்கி   வந்து   இவ்வாறு   நம்பிக்கை   துரோகம்   செய்ய   நேர்ந்ததே .  அவர்   இருந்த   ஒரு   துண்டையும்   கொடுத்து     விட்டு   இந்த   மழையில்   என்ன  கஷ்டப்படுவார்   என்ற   எண்ணம்   அவரை   நிலைகுலைய   செய்தது .  தாம்   பெரும்   தண்டனைக்கு   தகுதியானவன்   என்று   முடிவு   செய்து   துணி   துவைக்கும்   கல்லில்   தன்   தலையை   மோதிக்கொள்ள   ஆரம்பித்தார் .  பொறுப்பாரா   ஐயன் .  உடனே   அவர்   முன்   தோன்றி   'திருக்குறிப்பு   தொண்டரே !  நிறுத்தும்   நீங்கள்   எமபக்தர்களுக்கு   குறையில்லாமல்   செய்யும்   தொண்டில்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தோம் .  தங்களை   சோதிக்க   யாமே   இவ்வாறு   வந்தோம்   கவலை   வேண்டாம் .  என்று   ஆறுதல்   கூறி   அவரை   தம்முள்   சேர்த்துக்கொண்டார் .

No comments:

Post a Comment