தொண்டர் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டு அதை வெள்ளாவியில் போட்டு பிறகு மற்ற பணிகளுக்கு சென்று விட்டார் . பிறகு மறந்து போனார் . மறுபடி நினைவு வந்தபோது மதியம் ஆகிவிட்டது . அவசரமாக அதை கசக்கி பிழிந்து உலர்த்த போனார் . அப்போது திடிரென்று கறுத்த மேகங்கள் சூழ்ந்தன . அவர் நிலைகுலைந்து போனார் . மழை வந்தால் என்ன செய்வது என்று எண்ணும்போதே மழை கொட்ட ஆரம்பித்தது . அவருக்கு தன்னையே மன்னித்து கொள்ள முடியவில்லை. புலம்பினார் தான் செய்தது பெரும் பிழை மன்னிக்க முடியாதது என்று மன உறுத்தல் தாளவில்லை . அவர் அத்தனை சொல்லியும் கேளாமல் வாங்கி வந்து இவ்வாறு நம்பிக்கை துரோகம் செய்ய நேர்ந்ததே . அவர் இருந்த ஒரு துண்டையும் கொடுத்து விட்டு இந்த மழையில் என்ன கஷ்டப்படுவார் என்ற எண்ணம் அவரை நிலைகுலைய செய்தது . தாம் பெரும் தண்டனைக்கு தகுதியானவன் என்று முடிவு செய்து துணி துவைக்கும் கல்லில் தன் தலையை மோதிக்கொள்ள ஆரம்பித்தார் . பொறுப்பாரா ஐயன் . உடனே அவர் முன் தோன்றி 'திருக்குறிப்பு தொண்டரே ! நிறுத்தும் நீங்கள் எமபக்தர்களுக்கு குறையில்லாமல் செய்யும் தொண்டில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் . தங்களை சோதிக்க யாமே இவ்வாறு வந்தோம் கவலை வேண்டாம் . என்று ஆறுதல் கூறி அவரை தம்முள் சேர்த்துக்கொண்டார் .
No comments:
Post a Comment