Wednesday, 3 January 2018

அவர்   ஆறு   கால   பூஜை   செய்வார் .  ஆறு   கால   பூஜைக்கும்   ஆறு   விதமாக   மாலைகள்   சிவபெருமானுக்கு  சாற்றி   அழகு   பார்த்து   மகிழ்வார் .  இவ்வாறு   அவர்   வாழ்ந்து   கொண்டிருந்த   காலத்தில்   ஞானசம்பந்த   மூர்த்தி    தன்   பரிவாரங்களுடன்   அவ்வூருக்கு   விஜயம்   செய்தார் .  அப்போது   முருகனார்   அவர்களை   தம்   இல்லத்திற்கு   வரவேற்று   எல்லோருக்கும்   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  இதனால்   சம்பந்தரும்    மிக   மகிழ்ந்து   அவருடன்   நெருங்கி   பழக்கலானார் .  முருகனாரின்   பூர்வ   ஜென்ம   புண்ணியத்தால்   சம்பந்தரின்   நட்பு   கிடைத்தது .  அப்போது   சம்பந்தர்   திருமணம்   நடைபெற்றது .  இவருக்கும்   அழைப்பு   வந்ததால்   இவர்   திருமணத்தில்   கலந்து   கொண்டு   சம்பந்தரோடு   சிவபெருமான்   ஜோதியில்   கலந்து   கொள்ளும்   பெரும்   பேறு   பெற்றார் .

No comments:

Post a Comment