ஊர் எல்லைக்கு வெளியே இருந்து உயர்ந்த கோபுரத்தை வணங்கி பேரானந்தம் அடைந்தார் . மெல்ல ஊரை நெருங்கினார் . அங்கு தில்லை அந்தணர் தெருவில் ஹோமம் நடக்கும் மண்டபங்களும் , வேத பாடசாலைகள் நடக்கும் கூடங்களையும் கண்டு திடுக்கிட்டார் . அங்கு நுழைவதற்கு அஞ்சி எல்லையை தாண்டியே ஊரை சுற்றி கோயிலை வலம் வந்து மகிழ்ந்தார் . பக்தனின் இந்த நிலையில் கண்ட ஈசன் மனம் எத்தனை நாள் பொறுக்கும் . அவரை அணைத்து ஆனந்தம் கொள்ள அவர் மனம் துடித்தது . ஐயன் தில்லை அந்தணர்களின் கனவில் தோன்றி ஊரின் எல்லையில் என் அருமை பக்தன் ஆதனுர் புலையன் நந்தன் காத்திருக்கிறான் . அவனை காண நாமும் வெகு ஆவலாக இருக்கிறோம் . வேள்வி தீ மூட்டி அவனை புனித படுத்தி எம்மிடம் அழைத்து வாருங்கள் . என்று ஆணை இட்டார் .
No comments:
Post a Comment