Saturday, 13 January 2018

ஊர்   எல்லைக்கு   வெளியே   இருந்து   உயர்ந்த   கோபுரத்தை  வணங்கி   பேரானந்தம்   அடைந்தார் .    மெல்ல   ஊரை   நெருங்கினார் .  அங்கு   தில்லை   அந்தணர்   தெருவில்   ஹோமம்   நடக்கும்   மண்டபங்களும் ,  வேத   பாடசாலைகள்   நடக்கும்   கூடங்களையும்    கண்டு   திடுக்கிட்டார் .  அங்கு   நுழைவதற்கு   அஞ்சி   எல்லையை   தாண்டியே  ஊரை  சுற்றி   கோயிலை   வலம்   வந்து   மகிழ்ந்தார் .  பக்தனின்   இந்த   நிலையில்   கண்ட   ஈசன்   மனம்   எத்தனை   நாள்   பொறுக்கும் .  அவரை   அணைத்து   ஆனந்தம்   கொள்ள   அவர் மனம்   துடித்தது .   ஐயன்   தில்லை   அந்தணர்களின்   கனவில்   தோன்றி   ஊரின்   எல்லையில் என்   அருமை   பக்தன்   ஆதனுர்   புலையன்   நந்தன்   காத்திருக்கிறான் .  அவனை  காண    நாமும்   வெகு   ஆவலாக   இருக்கிறோம் .  வேள்வி   தீ   மூட்டி   அவனை   புனித   படுத்தி   எம்மிடம்   அழைத்து   வாருங்கள் .  என்று   ஆணை   இட்டார் . 

No comments:

Post a Comment