ஊன்றுகோலை பெற்றுக்கொண்ட சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்தார் . காஞ்சி வந்தடைந்தார் . அன்னையுடன் சேர்ந்து காட்சி அளிக்கும் பெருமானை கண்டார் . அன்னையை கண்ட சுந்தரருக்கு சிறிது நம்பிக்கை வந்தது . மனமுருக வேண்டினார் . அம்மையப்பனை நோக்கி '' அம்மையப்பா உங்களை காணும் ஆவலில் அன்றோ இப்பெரும் பிழையை செய்தேன் . உங்களை காணாமல் உயிர் வாழ்வது சாத்தியமில்லை . என்னை பிழை பொறுத்தருள மாட்டாயா ? அன்று நல்லூரில் நான் பிழை செய்ய இருந்தபோது என்னை காத்து ரக்ஷித்த நீ இப்போது மன்னித்து காக்க மாட்டாயா? ஏன் இந்த சோதனை ?'' என்று புலம்பினார் . அம்மை கூட இருப்பது காரணமோ . ஐயன் மனமிரங்கி அவருக்கு இடது கண் பார்வையை கொடுத்து அருளினார் .
No comments:
Post a Comment