Monday, 30 December 2019

ஊன்றுகோலை   பெற்றுக்கொண்ட   சுந்தரர்   தன்   யாத்திரையை   தொடர்ந்தார் .   காஞ்சி   வந்தடைந்தார் .   அன்னையுடன்   சேர்ந்து   காட்சி   அளிக்கும்   பெருமானை   கண்டார் .   அன்னையை   கண்ட   சுந்தரருக்கு    சிறிது   நம்பிக்கை   வந்தது .   மனமுருக   வேண்டினார் .  அம்மையப்பனை   நோக்கி    ''  அம்மையப்பா   உங்களை   காணும்   ஆவலில்   அன்றோ   இப்பெரும்   பிழையை    செய்தேன் .  உங்களை   காணாமல்   உயிர்   வாழ்வது   சாத்தியமில்லை .  என்னை   பிழை   பொறுத்தருள  மாட்டாயா ?   அன்று  நல்லூரில்   நான்   பிழை   செய்ய   இருந்தபோது   என்னை   காத்து   ரக்ஷித்த   நீ   இப்போது   மன்னித்து   காக்க   மாட்டாயா?  ஏன்   இந்த   சோதனை ?''  என்று   புலம்பினார் .   அம்மை   கூட   இருப்பது   காரணமோ .  ஐயன்   மனமிரங்கி   அவருக்கு   இடது      கண்   பார்வையை   கொடுத்து   அருளினார் .   

No comments:

Post a Comment