Wednesday, 25 December 2019

 சில    நாட்கள்   சுந்தரர்   சங்கிலியாருடன்   மகிழ்ச்சியாக  வாழ்ந்தார் .  இருவரும்   காலை   மாலை   இரு   வேளையும்   ஆலயம்  சென்று   ஒற்றியூர்   பெருமானை    சேவித்துக்கொண்டு   ஊர்மக்கள்    மெச்ச   வாழ்க்கை   நடத்தி   வந்தனர் .  சுந்தருக்கு   இப்புவியில்   இன்னும்   செய்ய   வேண்டிய   காரியங்கள்   உள்ளதால்   ஈசன்   அவ்விதம்    வாழ்வதை  மாற்ற  எண்ணம்   கொண்டார் .   திருவாரூரில்   வசந்த   உத்சவம்   நடக்க   வேண்டிய   சமயம்   அது .  அதை   பயன்படுத்திக்கொண்டு   சுந்தரரின்   மனதில்   அந்த   ஆவலை   தூண்டிவிட்டார் .   மனம்  நிலை  கொள்ளவில்லை      .   தியாகேசர்   அவர்   மனதில்   தோன்றி    அலைபாய   வைத்தார் .   ஆனால்   போவது   எவ்வாறு ?    அவர்   சங்கிலியாருக்கு   செய்து    கொடுத்த   சத் தியம்  ஒரு  புரம்  அழைத்து   போவது   சாத்தியமில்லை    .   பரவையார்   அனுமதிக்க   மாட்டார் . மனம்   தடுமாறியது .   இத்தனை   இக்கட்டிலும்    அவரால்   மனதை   கட்டுப்படுத்த    முடியவில்லை .      பொறுக்க   முடியாமல்   ஒரு    நாள்   ஆரூர்   கிளம்பி   விட்டார்  .  சங்கிலியாரிடம்   சொல்லாமல்   ஆரூர்  செல்ல   முற்பட்டார் .   ஒற்றியூர்   எல்லை     தாண்டியதும்   அவர்  கண்கள்   இருண்டு   த லை  சுற்றி  கீழே    விழுந்தார் .   எழுந்த     போது     அவருடைய   இரு   கண்களும்   ஒளி   இழந்து   பார்வை   அற்று   போயிருந்தார் .      

No comments:

Post a Comment