காஞ்சியை அடைந்த சுந்தரர் ஏகாம்பிரேஸ்வரரை வணங்கி மகிழ்ந்து அங்கு சில நாட்கள் தங்கி இருந்து பிறகு , திருமேற்றளி ஓணகாந்தன்தளி மற்றும் சில தலங்களை சேவித்து திருக்காளத்தி அடைந்தார் . மலையை வழிப்பட்டு படியேறி சென்று இறைவனுக்கு கண் கொடுத்து ஈசனின் வல ப்பாகத்தில் இடம் பெற்ற கண்ணப்பரை தரிசித்து களித்தார் . அங்கிருந்து மனக்கண்ணாலேயே திருக்கேதாரம் , திருப்பருப்பதம் முதலிய இடங்களை சேவித்துக்கொண்டார் . காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருஒற்றியூர் வந்து சேர்ந்தார் . அவருடைய பிறப்பின் மற்றோரு காரணம் நிறைவேற ஈசன் திட்டப்படி அங்கு வந்தார் .
கைலையில் வாழும்போது சுந்தரர் இரு பெண்களை கண்டு மயங்கி சில கணங்கள் மூவரும் தன்நிலை மறந்தனர் . ஈசன் அவர்களை இவ்வுலகில் பிறந்து சுந்தரர் அந்த இரு பெண்களையும் மணந்து சிறிது காலம் இல்லற சுகம் அனுபவிக்க கட்டளையிட்டார் . சுந்தரர் இவ்வுலகில் வாழும்போது அவருக்கு வழிகாட்டுவதாகவும் வாக்களித்தார் . அதனால்தான் அவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது ஐயன் ஓலையை காட்டி ஆட்கொண்டார் .
கைலையில் வாழும்போது சுந்தரர் இரு பெண்களை கண்டு மயங்கி சில கணங்கள் மூவரும் தன்நிலை மறந்தனர் . ஈசன் அவர்களை இவ்வுலகில் பிறந்து சுந்தரர் அந்த இரு பெண்களையும் மணந்து சிறிது காலம் இல்லற சுகம் அனுபவிக்க கட்டளையிட்டார் . சுந்தரர் இவ்வுலகில் வாழும்போது அவருக்கு வழிகாட்டுவதாகவும் வாக்களித்தார் . அதனால்தான் அவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது ஐயன் ஓலையை காட்டி ஆட்கொண்டார் .
No comments:
Post a Comment