Monday, 16 December 2019

சங்கிலி   நாச்சியாரின்  கதையை   கேட்ட   சுந்தரரின்   மனம்   அலை   பாய்ந்தது .  அவளை   அடைய   மனம்   ஆவல்    கொண்டது .  தாம்   இப்புவியில்   பிறக்க   இரண்டு   பெண்கள்   காரணம்   என்பதை   அறிந்திருந்த  சுந்தரர்   பரவையாரை   தவிர   மற்றவள்   அவளோ   என்று   அவர்   மனம்   எண்ணியது .    சங்கிலியார்   ஈசன்   அருள்   பெற்றவர்   என்று   குறிப்பிட்டது   தன்னைத்தானோ   என்று   சந்தேகம்    உண்டாயிற்று .  அதை   ஐயனை   கேட்டே   தெளிவு   படுத்திக்கொள்ள     முடிவு   செய்தார் .   ஒற்றியூர்   சிவபெருமானை   நாடி   ''என்   உள்ளத்தில்   மிகுந்த   சலனத்தை   ஏன்   ஏற்படுத்தி   விட்டாய் ?  அன்று   நடக்கவிருந்த   என்   திருமணத்தை   நிறுத்தி   என்னை   ஆட்கொண்ட   பெருந்தகை   அல்லவோ  நீ ?  இன்று   இப்பெண்ணை   கண்டு   சலனப்பட   வைத்து   விட்டாய் ?  அப்படியானால்   அவள்தான்  அந்த   இரண்டாவது   பெண்ணா ?   என க்கு  அவளை   கண்டதும்  அவளை   ஆடைய   வேண்டுமென்ற   வேட்கையை   ஏன்   ஏற்படுத்தினாய் ?  அவளை   எனக்கு   மணமுடித்து வைத்து   விடு ''  என்று    புலம்பினான் .     ஈசன்   உமது   இச்சையை   நாம்   நிறை வேற்றி    வைப்போம்     என்று   வாக்களித்தார் .

No comments:

Post a Comment