மறுநாள் சுந்தரர் அந்த அடியாருடன் ஆலயம் சென்று சங்கிலியாருக்காக காத்திருந்தார் . அப்போது சங்கிலியார் நீராடி புத்தாடை அணிந்து ஐயனுக்கு வாசமிக்க மலர்மாலை எடுத்துக்கொண்டு ஆலயம் நோக்கி வந்தார் . அவளை கண்டதும் மனம் மகிழ்ந்த சுந்தரர் அவளிடம் வந்து 'பெண்ணே உன்னை கண்டது முதல் என் மனம் என் வசம் இல்லை . எம்பெருமானும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார் .' என்று அவர் சொன்னதும் சங்கிலியார் மனம் புல்லரிக்க தலை குனிந்து நின்றாள் . தொடர்ந்து சுந்தரர் 'பெண்ணே ஏன் மெளனம் உனக்கும் சம்மதமென்று ஈசன் தெரிவித்தார் . என்னுடன் எம்பிரான் சன்னதிக்கு வா நீ கேட்டபடி அவர் முன் உன்னை பிரிவதில்லை என்று சத்தியம் செய்து தருகிறேன்.' என்று அவளை அழைத்தார் .
No comments:
Post a Comment