Monday, 23 December 2019

மறுநாள்   சுந்தரர்   அந்த   அடியாருடன்   ஆலயம்   சென்று   சங்கிலியாருக்காக   காத்திருந்தார் .   அப்போது   சங்கிலியார்   நீராடி   புத்தாடை   அணிந்து   ஐயனுக்கு   வாசமிக்க    மலர்மாலை   எடுத்துக்கொண்டு   ஆலயம்  நோக்கி     வந்தார் .    அவளை   கண்டதும்   மனம்   மகிழ்ந்த   சுந்தரர்   அவளிடம்   வந்து   'பெண்ணே    உன்னை   கண்டது   முதல்   என்   மனம்   என்   வசம்   இல்லை .  எம்பெருமானும்   இதற்கு   சம்மதம்   தெரிவித்து   விட்டார் .'  என்று   அவர்   சொன்னதும்   சங்கிலியார்   மனம்   புல்லரிக்க   தலை   குனிந்து   நின்றாள் .  தொடர்ந்து   சுந்தரர்   'பெண்ணே   ஏன்   மெளனம்   உனக்கும்   சம்மதமென்று   ஈசன்   தெரிவித்தார் .  என்னுடன்    எம்பிரான்   சன்னதிக்கு   வா   நீ   கேட்டபடி   அவர்   முன்    உன்னை   பிரிவதில்லை   என்று   சத்தியம்   செய்து   தருகிறேன்.'  என்று   அவளை   அழைத்தார் .      

No comments:

Post a Comment