Monday, 30 December 2019

சுந்தரர்   சொல்லொணா   வேதனையில்   ஆழ்ந்தார் .  உற்ற   நண்பராக   தம்மை   தாங்கிய   ஐயன்   இத்தனை   கடும்   தண்டனை   அளித்தது   அவரை   நிலைதடுமாற   செய்தது .  ஆனாலும்    மனம்   மாற்ற   இயலவில்லை .  ஆரூரானை   காணாமல்    இருப்பது   சாத்தியமில்லை   என்று   மனம்   தத்தளித்தது .  சமாளித்து   கொண்டு   எழுந்தார் .  '' ஐயனே   என்   கண்ணைத்தானே   எடுத்துக்கொண்டாய் ?  என்   உள்ளம்   மாறாது .  ஆரூரனை   காணாமல்   வாழ்வது   சாத்தியமில்லை ''  என்று   சொல்லிக்கொண்டே   அடியார்கள்   உதவியுடன்   எழுந்தார் .   தன்   தல   யாத்திரையை    தொடங்கினார் .  திருமுல்லைவாயில்   சென்று   பெருமானை   தரிசித்தார் ,  பிறகு   திருவேற்காடு   சென்றடைந்தார் .  அங்கு  ''பிழையுளன   பொறுத்திடுவீர் ''   என்று   மன்னிக்க  வேண்டி   பதிகம்   பாடி    மன்றாடினார் .   சிறிது   மனமிரங்கிய   பெருமான்   சிறிது   கருணை        காட்ட   விரும்பியவராய்      ஊன்றுகோல்  ஒன்றை   அளித்தார் .      

No comments:

Post a Comment