சுந்தரர் சொல்லொணா வேதனையில் ஆழ்ந்தார் . உற்ற நண்பராக தம்மை தாங்கிய ஐயன் இத்தனை கடும் தண்டனை அளித்தது அவரை நிலைதடுமாற செய்தது . ஆனாலும் மனம் மாற்ற இயலவில்லை . ஆரூரானை காணாமல் இருப்பது சாத்தியமில்லை என்று மனம் தத்தளித்தது . சமாளித்து கொண்டு எழுந்தார் . '' ஐயனே என் கண்ணைத்தானே எடுத்துக்கொண்டாய் ? என் உள்ளம் மாறாது . ஆரூரனை காணாமல் வாழ்வது சாத்தியமில்லை '' என்று சொல்லிக்கொண்டே அடியார்கள் உதவியுடன் எழுந்தார் . தன் தல யாத்திரையை தொடங்கினார் . திருமுல்லைவாயில் சென்று பெருமானை தரிசித்தார் , பிறகு திருவேற்காடு சென்றடைந்தார் . அங்கு ''பிழையுளன பொறுத்திடுவீர் '' என்று மன்னிக்க வேண்டி பதிகம் பாடி மன்றாடினார் . சிறிது மனமிரங்கிய பெருமான் சிறிது கருணை காட்ட விரும்பியவராய் ஊன்றுகோல் ஒன்றை அளித்தார் .
No comments:
Post a Comment