தரிசனம் முடித்து மடத்திற்கு வந்த சுந்தரருக்கு மனம் நிலைக்கொள்ளவில்லை . கோயிலில் கண்ட அப்பெண்ணின் மலர்முகம் அவரை அலைக்கழித்தது . தன்னுடன் ஆலயத்திற்கு வந்த ஒருவரிடம் அந்த பெண்ணை பற்றி விசாரித்தார் . அவர் அவ்வூரின் எல்லையில் உள்ள ஞாயிறு எனும் இடத்தில் ஞாயிறுகிழார் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார் என்றும் அவருடைய மகள் சங்கிலி எனும் பெயர் என்றும் அவர் தெரிவித்தார் . மேலும் அவர் அவளுடைய பெற்றோர்கள் அவளுடைய திருமண பேச்செடுத்தால் ஈசன் அருள் பெற்ற ஒருவரைத்தான் மணமுடிப்பேன் என்றும் தனக்கு ஒற்றியூர் பெம்மானுக்கு சேவை செய்வது ஒன்றே விருப்பம் என்று சொல்லி மறுத்து வந்ததாகவும் கூறினார் . அவளை மாற்ற எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை . ஒரு சமயம் அவருடைய உறவினர் தன் மகனுக்கு அவளை மணம் பேசவந்து பேசி முடித்துக்கொண்டு ஊர் திரும்பினர் . அனால் அவர்கள் போய் சேர்ந்த போது அந்த மகன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ந்து போனார்கள் . ஞாயிறு கிழாரும் பெண்ணின் வார்த்தையில் உள்ள உண்மையை உணர்ந்து அதிர்ந்து போனார் . இந்த விவரங்களை கேட்ட சுந்தரர் திடுக்கிட்டார் .
No comments:
Post a Comment