Wednesday, 18 December 2019

ஐயன்   சங்கிலியரிடமிருந்து   ஆரூரரிடம்   வந்தார் .  சுந்தரா   நீ   விரும்பியபடி   அவள்  உன்னை   மணக்க   சம்மதித்து   விட்டாள் .  ஆனால்   ஒரு   நிபந்தனை.  அதாவது   என்  முன்னால்    அவளை   பிரிய   மாட்டேன்   என்று   சத்தியம்   செய்து   தர   வேண்டும் .  என்றார்   அவள்   சம்மதித்தது   சுந்தரருக்கு   பேரானந்தம்   அளித்தது .  ஆனால்   தல   யாத்திரை   செய்து   சிவபெருமானை   சேவிக்காமல்   இருக்க   ?  அது   சாத்தியமா   கேள்வி   எழுந்தது .  தோழனல்ல வா   எதுவும்   கேட்கலாம் .  என்று   ஐயனே   நான்   சத்தியம்   செய்ய   வரும்போது   தாங்கள்   தயை   கூர்ந்து   சன்னதியிலிருந்து   விலகி   மகிழ   மரத்தில்   சிறிது   நேரம்   தங்க வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார் .  அவர்   சம்மதித்தார் .  அனால்   உடனே   சங்கிலியிடம்   சென்று    பெருமான்   சிரித்துக்கொண்டே   சங்கிலி   நாளை  ஆருரனிடம்   சன்னதியில்   சத்தியம்   செய்ய   தேவையில்லை .  மகிழ   மரத்தடியில்   செய்தால்   போதும்   என்று   கூறிவிட   சொன்னார் .     

No comments:

Post a Comment