திருக்குருகாவூர் சென்று சுந்தரர் கட்டுசோறு அளித்து பசி தீர்த்த கங்காதரரை நன்றிப்பெருக்குடன் கண்ணீர் மல்க பதிகம் பாடி அவரை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தார் . பிறகு சில தலங்களை சேவித்து கொண்டு தில்லையை அடைந்தார் . அங்கிருந்து நல்லூர் சென்றார் . அங்கு இவர் வருவதை அறிந்து ஏராளமான பக்தர்கள் கூடி அவரை மிக்க அன்புடன் வரவேற்றனர் . அந்த வரவேற்பை கண்டு சுந்தரர் நெகிழ்ந்து போனார் . அங்கு சிலகாலம் தங்கி பிறகு திருக்கழுக்குன்றம் சென்று வேதபுரீஸ்வரரை வணங்கி மகிழ்ந்தார் . அங்கிருந்து காஞ்சி செல்ல புறப்பட்டு வழியில் திருக்கச்சுர் அடைந்தார் . வெய்யில் தகித்தது . பசி தாகம் அவர் ஏற் பாடு செய்திருந்தபடி சமையல்காரர்கள் வந்து சேரவில்லை . சோர்வுடன் இருந்த சுந்தரரின் நிலைமையை காண சகியாத ஈசன் ஒரு அந்தணர் வடிவில் வந்து அவரிடம் 'உங்களை பார்த்தால் மிக சோர்வுட ன் காணப்படுகிறீர்கள் ' என்று பரிவுடன் கேட்டார் . சுந்தரர் நான் ஏற்பாடு செய்தபடி சமையல் செய்பவர்கள் வந்து சேரவில்லை என்று பதிலு ரைத்தார் . ஈசன் அதற்கு கொஞ்சம் பொறுங்கள் அக்கிரகாரம் சென்று இரண்டு மூன்று வீடுகளில் பிக்ஷை வாங்கி வந்து உங்களுக்கு உணவு அளிக்கிறேன் . என்று சொல்லி கிராமத்துள் சென்று உணவு வாங்கி வந் அளிக்கிறார் .
No comments:
Post a Comment