Thursday, 26 December 2019

சுந்தரர்   திடுக்கிட்டு   தடுமாறி   போனார் .   மகிழ   மரத்தடியில்   ஐயன்   இருக்க   தான்   செய்து   கொடுத்த   சத்தியத்தை       மீறியதால்   வந்த   விளைவா   இது ?  சங்கிலியாரை   பிரிந்து   வந்ததால்   ஈசனின்   தண்டனையா  இது   அவர்   மனம்   தடுமாறியது .  ஒளி   இழந்த   கண்களிலிருந்து   கண்ணீர்   ஆறாய்   பெருகியது .  கோயில்   பக்கம்   திரும்பி   கரம்    கூப்பி   கண்ணீர்   மல்க   கதறினார் .   'ஐயனே   என்னை   தண்டிக்காதே .  சங்கிலியாரை   பிரிவது   என்   நோக்கமல்ல .  கொடுத்த   வாக்கை   மீறுவதும்   என்  எண்ணமில்லை .  ஆரூர்   ஈசனை   காணாமல்   என்னால்   கணமும்   இருக்க   இயலாது .  ஆரூரன்   மேலுள்ள   காதலே   என்னை   வாக்கு   மீற   செய்தது .  கண்ணை   கொடுத்து   விடு   என்று   கதறினார் .  தன்   மன   வேதனையை
பதிகங்களாக   பாடி   ஐயனுக்கு   சமர்ப்பித்தார் .   அனால்   ஐயன்   மனம்  இறங்குவதாக   இல்லை 

     .

No comments:

Post a Comment