சுந்தரர் வார்த்தைகளை கேட்ட சங்கிலியார் சந்தோஷத்துடன் 'சுவாமி உங்கள் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிடில் அன்றோ ஈசன் முன் சத்தியம் செய்ய வேண்டும் எனக்கு உம்மிடம் அதிக நம்பிக்கை இருக்கிறது . ஆகையால் சாதாரண சத்தியமே போதும் ' என்றாள் . பின் எங்கு சத்தியம் செய்து தரவேண்டும் என்று திடுக்கிட்ட சுந்தரர் வினவினார் . அதற்கு அவள் வாருங்கள் அந்த குளிர்ந்த மகிழ மரத்தடியில் செல்வோம். அங்கு என் மனம் குளிர சத்தியம் செய்து கொடுத்தால் போதும் ' என்று கூறினாள் . சுந்தரர் திடுக்கிட்டார் . ஐயன் அங்கு அல்லவா இருக்கிறார் . இ ப்போது மறுத்து சொல்வதற்கில்லை . தவறாக நினைப்பாள் . இறைவன் முன் அல்லவோ சத்தியம் செய்து தர வேண்டும் . தர்ம சங்கடத்தில் அல்லவோ மாட்டிக்கொண்டார் . சங்கிலியார் சுந்தரரை வணங்கி விடை பெற்றாள் . அவரும் பெருமானை வணங்கி விட்டு மடத்திற்கு சென்றார் . ஈசன் அடியார்கள் கனவில் தோன்றி மறுநாள் அவர்கள் திருமணத்தை விமரிசையாக நடத்துமாறு ஆணையிட்டார் . ஐயன் திருவாக்குப்படி திருமணம் நடந்தேறியது . மண வாழ்க்கை மகிழ்ச்சியாக துவங்கியது .
No comments:
Post a Comment