Wednesday, 11 December 2019

சுந்தரர்   அப்பெரிய   தர்மசங்கடத்திலிருந்து   எம்பிரான்   பெரும்   கருணையாலும்   அவர்   தான்   கொடுத்த   வாக்கை   காப்பாற்றி இல்லாவிடில்   மூன்றாவதாக   அப்பெண்ணை   மணந்து   இப்பூலோக   வாழ்வை   நீட்டித்திருப்பார் .  ஐயன்   பேரருளை   சுந்தரர்   மறக்கமுடியுமா ? அவர்   கைலையில்   கண்ட   ஒரு   பெண்  பரவையாரை   மணந்து   திருவாரூரில்  . வாழ்ந்து   வருகிறார் .  மற்றோரு   பெண்ணை   சநதிக்க   ஒற்றியூருடைய  பெம்மான்    துணை   செய்கிறார் . 
    ஒற்றியூரில்   சுந்தரர்   ஒரு   மடத்தில்   தங்கி   எம்பெருமானை   தினம்   தரிசித்து   வருங்கால்   ஒருநாள்   கோயிலில்   அடியார்களின்   தொண்டினை   பார்த்து   மகிழ்ந்தபடி   வந்து   மலர்   மண்டபத்தை   அடைந்தார் .   அங்கு   வாசமிக்க    மலர்களை   மாலையாக    கட்டிக்கொண்டிருந்த   காட்சியை   ரசித்தபடி   சுந்தரர்   வந்து   கொண்டிருந்தார் .   அப்போது   ஒரு   அழகிய     மங்கை   மாலையை   எடுத்துக்கோண்டு   திரையை   விலக்கிக்கொண்டு   வெளியே   வந்தாள் .  சுந்தரர்      அவளை   கண்டு  ஒரு   கணம்   மலைத்தார் . அவளும்   அவரை   கண்டு    ஒரு   மலைத்து   நின்று   பிறகு   ஓடி   மறை.ந்தாள்            .         

No comments:

Post a Comment