சம்பந்தர் பிறந்த மண்ணில் கால் வைக்க மனம் ஒப்பாமல் சுந்தரர் சீர்காழி நகரை வலம் வந்து வணங்கிவிட்டு திருக்கு ருகாவூர் நோக்கி பயணப்பட்டார் . சுந்தரர் மிக களைப்புடனும் பசியுடனும் இருந்தார் . தம்பிரான் தன் தோழர் பசியை காண சகிப்பாரா? மனம் பொறாமல் ஓடிவந்தார் . பாதையில் ஓரிடத்தில் ஓரு பந்தல் அமைத்து அதில் கட்டு சோறுடன் அந்தணர்வேதத்தில் காத்திருந்தார் . சுந்தரர் பாதையில் தென்பட்ட பந்தலை கண்டு மகிழ்ந்து அடியார்களுடன் அங்கு தங்க திட்டமிட்டு அங்கு வந்தார் . அந்தணர் கோலத்திலிருந்த ஐயன் 'உங்களை பார்த்தால் களைத்து போயிருப்பது தெரிகிறது . என்னிடம் சிறிது உணவு இருக்கிறது . அதை உண்டு களைப்பாருங்கள் . என்று சொல்லி வைத்திருந்த உணவை கொடுத்தார் . அந்த உணவை அடியார்களுக்கும் கொடுத்து தானும் உண்டார் . எல்லோரும் உறங்கி விட்டனர் . வந்த வேலை முடிந்த களி ப்பில் ஈசன் மறைந்தார் . பந்தலும் மறைந்தது . சுள்ளென்று வெய்யில் அடிக்க எல்லோரும் கண் விழித்தனர் . சுந்தரர் தம் பசிக்கு உணவளித்து வெய்யிலுக்கு பந்தலும் அமைத்து தம்மை காத்தது எம்பெருமான் என்று உணர்ந்து பக்தி பரவசத்தில் கண்ணீர் பெருக ''இத்தணை யாமாற்றை '' என்று பதிகம் பாடி மெய்சிலிர்க்க மயங்கி நின்றார் .
No comments:
Post a Comment