மனநிறைவுடன் பாணர் மதுரையை விட்டு புறப்பட்டு பல எம்பிரான் க்ஷேத்திரங்களில் தன் யாழிசையால் புகழ்ந்து பாடி மகிழ்ந்து ஐயனையும் மகிழ்வித்து ஆரூரை வந்தடைந்தார் . அங்கு கோபுர வாயிலில் நின்று ஆரூரர் மீது பக்தி இசையை யாழில் வாசித்து தம் உளமார்ந்த பக்தியை சமர்ப்பித்தார் . அவர் இசையில் மயங்கிய ஆரூரர் ஆலயத்தின் வடக்குப்புறம் ஒரு வாயிலை அமைத்து பாணரை தன் சன்னிதானத்தில் வந்து வாசிக்கும்படி அழைத்தார் . பாணர் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவர் சன்னிதானத்தில் மனம் குளிர வாசித்து மகிழ்ந்தார் . அப்போது அவர் ஆளுடைப்பிள்ளை சம்பந்தர் பெருமையை கேள்விப்பட்டு அவரிடம் வந்தார் . அவருடனேயே இருந்து அவர் பாடல்களை வாசிக்கும் பெரும் பேறு பெற்றார் . மிக்க மகிழ்ச்சியுடன் அவருடனேயே தங்கும் பாக்கியம் பெற்றார் . பல திருத்தலங்களில் அவருடனேயே இசைத்து சம்பந்தப்பெருமானுடைய திருமணத்தில் கலந்து அவருடனேயே ஈசனில் ஐக்கியமானர் .
No comments:
Post a Comment