Wednesday, 9 October 2019

மனநிறைவுடன்   பாணர்   மதுரையை   விட்டு   புறப்பட்டு   பல    எம்பிரான்   க்ஷேத்திரங்களில்     தன்   யாழிசையால்   புகழ்ந்து   பாடி  மகிழ்ந்து   ஐயனையும்    மகிழ்வித்து   ஆரூரை   வந்தடைந்தார் .  அங்கு   கோபுர     வாயிலில்   நின்று   ஆரூரர்   மீது   பக்தி   இசையை   யாழில்   வாசித்து   தம்   உளமார்ந்த   பக்தியை   சமர்ப்பித்தார் .  அவர்   இசையில்   மயங்கிய   ஆரூரர்   ஆலயத்தின்   வடக்குப்புறம்   ஒரு   வாயிலை   அமைத்து   பாணரை   தன்   சன்னிதானத்தில்   வந்து   வாசிக்கும்படி   அழைத்தார் .  பாணர்  மிக்க   மகிழ்ச்சி   அடைந்து   அவர்   சன்னிதானத்தில்   மனம்   குளிர   வாசித்து   மகிழ்ந்தார் .  அப்போது   அவர்   ஆளுடைப்பிள்ளை   சம்பந்தர்   பெருமையை    கேள்விப்பட்டு   அவரிடம்    வந்தார் .  அவருடனேயே   இருந்து  அவர்   பாடல்களை   வாசிக்கும்   பெரும்      பேறு   பெற்றார் .   மிக்க   மகிழ்ச்சியுடன்   அவருடனேயே   தங்கும்   பாக்கியம்   பெற்றார் .  பல   திருத்தலங்களில்    அவருடனேயே   இசைத்து   சம்பந்தப்பெருமானுடைய  திருமணத்தில்   கலந்து   அவருடனேயே    ஈசனில்   ஐக்கியமானர் .   

No comments:

Post a Comment