Wednesday, 23 October 2019

சுந்தரர்   மழபாடியில்   சில   நாள்   தங்கி   ஆசைதீர  அவரை   சேவித்துக்கொண்டு   திருவானைக்கா   புறப்பட்டார் .  அந்த   ஈசனை   பாராட்டி   பதிகங்கள்   பாடி   மகிழ்வித்தார் .   அங்கு   ஆற்று   வெள்ளத்தில்   விழுந்த   சோழ   மன்னனின்   முத்துமாலையை    திருமஞ்சனத்திற்கு   கொண்டு   சென்ற    குடத்தில்    வரவழைத்த   அந்த   ஈசனின்    திருவிளையாடல்    சுந்தரரை    மெய்சிலிர்க்க   வைத்தது .   அக்கருணையை   நினைந்து   நினைந்து   உருகி   போற்றினார் .    அங்கிருந்து   புறப்பட்டு   திருபாலாச்சிரமம்   சென்று   அங்கு   குடிகொண்டிருந்த   ஈசனை   பாடி   பொன்   பெற்றார் .  அங்கிருந்து   புறப்பட்டு     திருப்பைஞிலி ,   ஈங்கோய்மலை      சென்று   சேவித்துக்கொண்டு   மேலை   சிதம்பரம்   என்று  கொண்டாடப்படும்   பேரூர்   அடைந்தார் .  அங்கு    கூத்தப்பிரானின்   தாண்டவ   கோலத்தை   தரிசித்து   ஆனந்தம்   அடைந்தார் .   அங்கு   அவருக்கு   தில்லை   அம்பலக்கூத்தனை   தரிசனம்   செய்யவும்   ஆவல்   எழுந்தது .

No comments:

Post a Comment