Sunday, 20 October 2019

சுந்தரருக்கு     மீண்டும்    ஐயன்   ஞாபகம்   மறுபடி    தல யாத்திரை   புறப்பட்டார் .  நன்னிலம்   சென்று   பரமனை   தரிசித்து     கொண்டு   திருவீழிமிழலை   ஆவடுதுறை   மற்றும்   பல   தலங்களை   தரிசித்துக்கொண்டு    திருக்குடந்தை   எம்பெருமான்   திருவடி   தொழுது   அவர்   மீது    பாடல்கள்   புனைந்து   பாடி   மகிழ்ந்து   புறப்பட்டார் .    அங்கிருந்து   திருவலஞ்சுழி    திருநல்லூர்   திருவையாறு   எல்லாம்   சென்று    திருஆலம்பொழில்     அடைந்தார் .  இரவு  நேரம்    ஆகிவிடவே   அங்கேயே   படுத்து   உறங்கி   போனார் .    பக்கத்தில்   மழபாடி   எனும் ஊர்    உளது .   அங்கு   குடிகொண்டுள்ள   ஈசனுக்கு   தம்   அருமை   பக்தன்   தன்னை   வணங்காமல்    போய்விடுவானோ   என்று    அச்சம்   எழுந்தது    போலும் .   சுந்தரர்    கனவில்   தோன்றி   ''   வன்தொண்டனே   மழபாடி    வர   மறந்தனையோ ?'' என்று      கேட்டு   மறைந்தார் .  திடுக்கிட்டு  எழுந்தா ர்  .  சந்தரர்    நேராக   திருஆனைக்கா     செல்ல தான்    எண்ணி   இருந் தார் .  தன்னை   நினைவு   படுத்தி   மழபாடிக்கு   அழைத்த   அவர்   பேரன்பை   எண்ணி   சுந்தரர்   மனம்   பாகாய்   உருகியது .   இரவில்லாம்   அதே   மகிழ்ச்சி .   ஐயன்   கருணையை   எண்ணி   சொல்லணா   இன்பம் .    விடிந்ததும்   சொல்லொணா   ஆனந்தத்துடன்   கோயில்   சென்றார்   .ஓங்கி உயர்ந்த   கோபுரம்   கண்டு   மெய்சிலிர்த்தார் .  உள்   சென்று   'பொன்னார்   மேனியனே '   என்று   பதிகம்   பாடி   தொழுது   மகிழ்ந்தார் .   

No comments:

Post a Comment