Sunday, 13 October 2019

ஈசன்   உடனே   இன்றிரவே   இந்நெல்   பூராவும்   ஆரூரில்   சேர்ப்போம்   என்று      அருளினார் .  ஐயன்   ஆணைப்படி   சிவகணங்கள்    பூரா   நெல்லையும்  ஆரூர்   கொண்டு   சேர்த்தன .  விடிந்து   ஆரூர்   வாசிகள்   தெரு   புரா      குவிக்கப்பட்டிருக்கும்   நெற்குவியலை   கண்டு   அதிசயித்தனர் .  அவை   பரவை நாச்சியாருக்கு    அனுப்பப்பட்டது   என்று   கேள்விப்பட்டு   எங்கே    சேமிப்பார்கள்   என்று   அதிசயப்பட்டனர் .  ஆனால்   பரவையார்   இத்தனை   நெல்லையும்   தாமே   எடுத்துக்கொள்ள   விரும்பாமல்   ஆருரவாசிகளை   அவரவர்   வீட்டு   வாயிலில்   உள்ள   நெல்மணிகளை   அவரவர்களே   எடுத்துக்கொள்ள   சொல்லி   பறை   சாற்றினார் .  அவருடைய   நல்ல   உள்ளத்தை   பாராட்டாதவர்   இல்லை .   

No comments:

Post a Comment