Tuesday, 8 October 2019

திருநீலகண்டத்து   பாணனார்க்கு    அடியேன் |

எருக்கத்தம்புலியூர்   எனும்   இடத்தில்   பாணர்   குலத்தில்   பிறந்த   நீலகண்ட   யாழ்ப்பாணர்   வசித்து   வந்தார் .  யாழ்   வாசிப்பதில்   மிக்க   தேர்ச்சி   பெற்றிருந்தார் .  அதனாலேயே   அவர்   அவ்வாறு   பெயர்   பெற்றார் .  அவர்  எம்பெருமான் மீது   அளவற்ற   பக்தி   கொண்டிருந்தார் .  சிவாலயங்களில்   கோபுர   வாசலில்   நின்றபடி   ஐயன்   மீது   பாடப்பட்ட   பாடல்களை   மனம்   உருக   வாசிப்பதை    வாடிக்கையாக   கொண்டிருந்தார் .    அன்பே   உருவான   ஈசன்   இவரை   காணாமல்   இருப்பாரா ?  ஒரு   சமயம்   பாணர்   பாண்டிய   நாடு   சென்றார் .    அங்கு   ஆலவாயர்   கோயிலுக்கு   சென்று   கோபுர     வாசலில்   ஆலவாய்   அண்ணலின்       மேல்   பாடல்களை   கேட்பவரை   உருக்கும்   வண்ணம்   யாழில்   வாசித்தார் .  அன்புக்கடலான   ஐயன்   மனம்   உருகியதில்   அதிசயம்   இல்லை .  

No comments:

Post a Comment