குண்டையூர் கிழார் என்பவர் குண்டையூரில் வாழ்பவர் . அவர் சுந்தரரை பற்றி கேள்விப்பட்டு அவரமீது மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டார் . அவர் ஆரூர் வந்து அவரை தம்பிரான் தோழனாக கண்டதும் அவர் மரியாதை மிக அதிகமாகி அவருடைய அடியாரானார் . ஆரூர் பெருமான் சுந்தரர் மீது வைத்திருக்கும் அன்பு அவரை மிக்க வியப்பில் ஆழ்த்தியது . அதுமுதல் அவரும் மனைவியும் அமுது செய்ய கிழார் நெல்லை தன் களஞ்சியத்திலிருந்து அனுப்புவதை வாடிக்கையாக கொண்டார் . ஒரு சமயம் மழை இல்லாமல் வறண்டு நெல் விளைச்சல் குறைந்து சுந்தரருக்கு அனுப்பகூட நெல் இல்லை . கிழார் மனம் நொந்து போனார் . அடியார்க்கு அனுப்ப நெல் இல்லாமல் போனது அவரை மிக துக்கத்தில் ஆழ்த்தியது . இரவு உணவு உண்ணாமல் உறங்கினார் . பக்தனின் துன்பத்தை பொறுக்காத ஐயன் அவர் கனவில் தோன்றி 'அடியாற்கு கொடுக்க நெல் குவித்து விட்டதாக கூறினார் .'
No comments:
Post a Comment