Friday, 11 October 2019

குண்டையூர்   கிழார்   என்பவர்   குண்டையூரில்   வாழ்பவர் .  அவர்   சுந்தரரை   பற்றி   கேள்விப்பட்டு   அவரமீது   மிக்க    மதிப்பும்   மரியாதையும்   கொண்டார் .  அவர்   ஆரூர்   வந்து   அவரை   தம்பிரான்   தோழனாக   கண்டதும்    அவர்   மரியாதை   மிக   அதிகமாகி   அவருடைய   அடியாரானார் .  ஆரூர்   பெருமான்   சுந்தரர்   மீது   வைத்திருக்கும்    அன்பு   அவரை   மிக்க    வியப்பில்   ஆழ்த்தியது .  அதுமுதல்    அவரும்   மனைவியும்   அமுது   செய்ய  கிழார்    நெல்லை   தன்   களஞ்சியத்திலிருந்து    அனுப்புவதை   வாடிக்கையாக    கொண்டார் .  ஒரு   சமயம்   மழை   இல்லாமல்   வறண்டு   நெல்   விளைச்சல்   குறைந்து    சுந்தரருக்கு   அனுப்பகூட    நெல்   இல்லை .  கிழார்   மனம்   நொந்து   போனார் .  அடியார்க்கு   அனுப்ப   நெல்   இல்லாமல்   போனது   அவரை   மிக   துக்கத்தில்   ஆழ்த்தியது  .  இரவு   உணவு   உண்ணாமல்    உறங்கினார் .   பக்தனின்   துன்பத்தை     பொறுக்காத    ஐயன்   அவர்   கனவில்   தோன்றி   'அடியாற்கு   கொடுக்க   நெல்   குவித்து   விட்டதாக   கூறினார் .'

No comments:

Post a Comment