ஈசன் சுந்தரரின் பிரார்த்தனையை நிறைவேற்ற முடிவு செய்து விட்டார பின்பு கேட்பானேன் . அவர் அருளால் சுந்தரருக்கு தூக்கம் வந்தது . அங்கு கோயில் திருப்பணிக்காக அடுக்கி வைத்திருந்த செங்கல்கள் சிலவற்றை எடுத்து போட்டுக்கொண்டு அதை தலையணையாக்கி ஒரு துண்டை விரித்து படுத்து உறங்கி போனார் . விடிந்து எழுந்து பார்க்கையில் செங்கல்கள் அனைத்தும் தகதக என்று பொன்னாய் மிளிர்வதை கண்டார் . அவருக்கு இறைவன் அருளை நினைக்கும்போது கண்கள் நீரை சொரிந்தன . உள்ளம் உருகி புகலூர் ஐயனை அவர் சன்னதியில் வந்து நின்று மெய்யுருக " தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் " எனும் பதிகத்தை பாடி தம் நன்றியை தெரிவித்தார் . வழியில் சில தலங்களை சேவித்துக்கொண்டு ஆரூர் வந்தார் . பரவையார் மாளிகையில் பங்குனி உத்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . அடியார்களெல்லாம் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி அமுது உண்டு களித்தனர் .
No comments:
Post a Comment