Wednesday, 2 October 2019

செங்கணான்   சோழ   அரியணை   ஏறியதும்   அவர்    சிவபெருமான்   திருவருளால்    பூர்வஜென்ம   நினைவுகளை   பெற்றார் .  அவர்   உடனே   திருவானைக்கா   சென்று   வெண்நாவல்   மரத்தடியில்   இருந்த   சிவலிங்கத்தை   கண்டு   அதற்கு   கோயில்   அமைக்க   திட்டமிட்டான் .  முன்   ஜென்மத்தில்   யானையால்   நேர்ந்த   துன்பம்   நினைவில்   வர   யானைகள்   ஏற   முடியாவண்ணம்   மாடக்கோயில்கள்   அமைத்தார்    .   சோழ   நாட்டில்   அநேக   சிவன்கோயில்கள்   கட்டுவித்தார்  .  தந்தையை   போலவே   தில்லை   நடராஜரிடம்   அளவற்ற   பக்தி   கொண்டு   சிதம்பரம்   சென்று   அங்கு    இறைவன்   தொண்டில்    ஈடுபட்டு   பெரும்   சேவைகள்   செய்தார் .  அந்தணர்களுக்கு   மாளிகைகள்   கட்டி   வைத்தார் . இவ்வாறு    இறைவன்   சேவையில்   தன்னை   அர்ப்பணித்து    கொண்டு  பல     காலம்     வாழ்ந்து   இறைவன்   அடி   சேர்ந்தார் .  

No comments:

Post a Comment