Tuesday, 8 October 2019

அன்று   இரவு   ஆலய   அன்பர்கள்   கனவில்   ஆலவாயர்   தோன்றி   பாணரை   தம்   ஆலயத்திற்கு   உள்ளே   அழைத்து   வந்து   வாசிக்க   செய்யும்படி   கட்டளை   இட்டார் .  அவ்வாறே   மறுநாள்   அவர்   வாசிக்க   கோபுர   வாயில்   வந்தபோது    கோயில்   உள்ளிருந்து   அன்பர்கள்   ஈசன்   கட்டளையை   தெரிவித்து    அவரைஏ   உள்ளே   வரும்படி   அழைத்தனர் .  பாணர்   ஈசன்   இச்செயலை   கேட்டு   நெக்குருகி    அவர்   அன்பை   எண்ணி   உள்ளம்   உருகி   போனார் .  உள்ளே   சென்றார் .  ''பாணர்   தரையில்   நின்று   வாசித்தால்    சீ தத்தால்   தந்தி      பாழாகும் .  ஆதலால்   சுந்தர பலகை   இடுங்கள்   என்று   அசரீரி   வாக்கு   எழுந்தது .  அவ்வாறே   அன்பர்கள்   தங்க   பலகை   எடுத்து   வந்தனர் .   இதை   கேட்ட   பாணர்   ஈசன்   அன்பை   நினைக்க   மலைத்து   போனார் .  உள்ளம்   சிலிர்த்தார் .   அந்த   பொற்பலகையில்   ஏறி   நின்று   மெய்மறந்து   ஐயனை  துதித்து    யாழ்   இசைத்தார் .   ஐயன்   அன்பை   எவ்வாறு   வர்ணிக்க .  

No comments:

Post a Comment