அன்று இரவு ஆலய அன்பர்கள் கனவில் ஆலவாயர் தோன்றி பாணரை தம் ஆலயத்திற்கு உள்ளே அழைத்து வந்து வாசிக்க செய்யும்படி கட்டளை இட்டார் . அவ்வாறே மறுநாள் அவர் வாசிக்க கோபுர வாயில் வந்தபோது கோயில் உள்ளிருந்து அன்பர்கள் ஈசன் கட்டளையை தெரிவித்து அவரைஏ உள்ளே வரும்படி அழைத்தனர் . பாணர் ஈசன் இச்செயலை கேட்டு நெக்குருகி அவர் அன்பை எண்ணி உள்ளம் உருகி போனார் . உள்ளே சென்றார் . ''பாணர் தரையில் நின்று வாசித்தால் சீ தத்தால் தந்தி பாழாகும் . ஆதலால் சுந்தர பலகை இடுங்கள் என்று அசரீரி வாக்கு எழுந்தது . அவ்வாறே அன்பர்கள் தங்க பலகை எடுத்து வந்தனர் . இதை கேட்ட பாணர் ஈசன் அன்பை நினைக்க மலைத்து போனார் . உள்ளம் சிலிர்த்தார் . அந்த பொற்பலகையில் ஏறி நின்று மெய்மறந்து ஐயனை துதித்து யாழ் இசைத்தார் . ஐயன் அன்பை எவ்வாறு வர்ணிக்க .
No comments:
Post a Comment