சோழ நாட்டை சுபதேவன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவர் மனைவி கமலவல்லி எனும் மாதரசி . அவர்கள் குழந்தை செல்வம் வேண்டி தில்லை நடராஜ பெருமானை மனமுருகி துதித்தனர் . ஐயன் மனமிறங்க அரசி கர்ப்பம் தரித்தாள் . பிரசவ காலம் நெருங்கியது. அரண்மனை சோதிடர்கள் இன்னும் ஒரு நாழிகை சென்று அக்குழந்தை பிறக்குமானால் அக்குழந்தை மூவுலகும் போற்ற தக்க பெருமை வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினர் . அதை கேட்ட அரசி அந்த நாழிகை வரும்வரை தன்னை தலை கீழாக கட்டி தொங்க விடுமாறு கேட்டுக்கொண்டாள் . என்னே தியாக சிந்தனை அம்மாதிற்கு .அந்த நாழிகை வந்ததும் அவளை இறக்கி விட செய்து அழகிய ஆண் குழந்தையை பெற்றாள் . தாமதித்து பிறந்ததால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்தன . அரசியார் ஆசை தீர பார்த்து 'என் ராஜா செங்கண்ணனோ ' என்று கொஞ்சினாள் . ஆனால் துரதிஷ்டவசமாக பிரசவ வேதனை காரணமாக சீக்கிரம் மாண்டு போனாள் அந்த மாதரசி என்னே அவள் தியாகம் . மன்னன் மிக்க துக்கமடைந்தான் . குழந்தைக்கு செங்கணான் என்றே பெயர் சூட்டினான் . உரிய பருவம் அடைந்ததும் அவனை அரசனாக முடிசூட்டி அரசன் தவ வாழ்வை ஏற்றான் .
No comments:
Post a Comment