Wednesday, 16 October 2019

ஆரூரில்   சுந்தரரும்   பரவையாரும்   ஆருரனிடம்   அளவு     பக்தியுடன்  இணைந்து   வாழ்ந்து   வரும்   பொது    பங்குனி   மாதம்   நெருங்கும்போது   பறவையாருக்கு    பங்குனி   உத்திர   நன்னாளை   விமரிசையாக   கொண்டாடி   ஈசனை   மகிழ்விக்க   ஆவல்       உண்டாயிற்று .    அதை   அவர்   சுந்தரரிடம்   தெரிவித்தார் .  சுந்தரர்   மகிழ்ச்சி   தெரிவித்தார் .    ஆனால்   அவரிடம்    அதற்கு   தேவையான   பொருள்   வசதி   இருக்கவில்லை .  அடியார்களிடம்    தெரிவித்தால்   தேவைக்குமேல்   பொருள்    கிடைத்திருக்கும்.  அனால்   சுந்தரர்   அவ்வாறு   செய்ய    விரும்பவில்லை .  தம்மை   ஆட்கொண்ட    எம்பெருமானையே   கேட்டு   பெற    எண்ணம்   கொண்டார் .   பரவையாரிடம்    ஐயனை   பல   தலங்கள்   சென்று   சேவித்து   வர    விரும்புவதாக   கூறி   விடை    பெற்றுக்கொண்டு   யாத்திரை   புறப்பட்டார் .     திருப்புகலூரை    அடைந்தார்  . மகாதேவரை   உளமார   தரிசித்து   தம்   உள்ள   தாபத்தையும்   தெரிவித்து   கோயிலை      வலம்   வந்து     பிராகாரத்தில்   தங்கினார் .    அம்பலக்கூத்தன்  தன்   பக்தனின்   விண்ணப்பத்தை   பூர்த்தி   செய்ய    முடிவு     செய்தார்  .     

No comments:

Post a Comment