ஆரூரில் சுந்தரரும் பரவையாரும் ஆருரனிடம் அளவு பக்தியுடன் இணைந்து வாழ்ந்து வரும் பொது பங்குனி மாதம் நெருங்கும்போது பறவையாருக்கு பங்குனி உத்திர நன்னாளை விமரிசையாக கொண்டாடி ஈசனை மகிழ்விக்க ஆவல் உண்டாயிற்று . அதை அவர் சுந்தரரிடம் தெரிவித்தார் . சுந்தரர் மகிழ்ச்சி தெரிவித்தார் . ஆனால் அவரிடம் அதற்கு தேவையான பொருள் வசதி இருக்கவில்லை . அடியார்களிடம் தெரிவித்தால் தேவைக்குமேல் பொருள் கிடைத்திருக்கும். அனால் சுந்தரர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை . தம்மை ஆட்கொண்ட எம்பெருமானையே கேட்டு பெற எண்ணம் கொண்டார் . பரவையாரிடம் ஐயனை பல தலங்கள் சென்று சேவித்து வர விரும்புவதாக கூறி விடை பெற்றுக்கொண்டு யாத்திரை புறப்பட்டார் . திருப்புகலூரை அடைந்தார் . மகாதேவரை உளமார தரிசித்து தம் உள்ள தாபத்தையும் தெரிவித்து கோயிலை வலம் வந்து பிராகாரத்தில் தங்கினார் . அம்பலக்கூத்தன் தன் பக்தனின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடிவு செய்தார் .
No comments:
Post a Comment