Thursday, 10 October 2019

என்னவனாம்   அரனடியே   அடைந்திட்ட   சடையன்
இசைஞானி   காதலன்   திருநாவலர்கோன்
அன்னவனாம்   ஆரூரன்   அடிமை   கேட்டுவைப்பார்
ஆரூரில்   அம்மானுக்கு   அன்பராவாரே | 

சுந்தரர்   பாணர்   பெருமையை   பாடி   பிறகு   தன்னை   பெற்றவர்களான   சடையனாரையும்   இசைஞானி   அம்மையாரையும்   போற்றி   பாடி   இவர்கள்   எல்லோருக்கும்   தான்   அடியேன்   என்று   பாடி   தம்   தொண்டர்   தொகையை     நிறைவு   செய்தார் .
      தேவாசிரிய   மண்டபத்தில்   குழுமி   இருந்த   அத்தனை   அடியார்களும்   சுந்தரர்   அடியார்கள்   மீது   கொண்டிருந்த   பக்தியை   கண்டு   மெய்சிலிர்த்து   போனார்கள் .  அவர்   மீது   தவறான  அபிப்ராயம்    கொண்டமைக்கு   மிக   வருந்தி  சுந்தரர்   காலில்   விழுந்து   மன்னிப்பு   கோரினர் .    

No comments:

Post a Comment