Saturday, 12 October 2019

வெளியே   வந்து   பார்த்த   கிழார்   அசந்து   போனார் .  என்னே   ஐயன்   கருணை   ஆச்சர்யத்தில்  மூழ்கி    போனார் .  ஊர்   முழுவதும்     நெற்குவியல் .   இத்தனை  நெற்குவியல்களை     ஆரூர்   சேர்ப்பது   எப்படி ?   என்று   அசந்து   போனார்   கிழார் .  சுந்தரரையே  கேட்போம்   என்று   கிளம்பினார் .  ஆனால்   சுந்தரருக்கு   முன்பே   இந்த   செய்தி    தெரிவிக்கப்பட்டு   விட்டதால்   அவர்  அங்கு   வந்து  சேர்ந்தார் .  தெருவெல்லாம்  நெற்குவியல்  கண்டு  அசந்து   போன   சுந்தரர்         இது   ஐயனால்   மட்டுமே   சாத்தியம்   என்பதால்   அவரையே   கேட்போம்   என்று   சொல்லி   பக்கத்திலுள்ள   அரன்   கோயிலுக்கு   சென்று   அவரை   வணங்கி   'நீளநினைந்து   அடியேன் ''    எனும்   பதிகம்   பாடி   உன்   அருளன்றி   இத்தனை   நெல்  . குவியல்   பரவையார்   வீட்டிற்கு   செல்வது   எவ்விதம் ?  தாங்களே   வழி   செய்ய   வேண்டும்    என்று   மனமுருக     வேண்டினார்.  சுந்தரர்   கேட்டு   மறுப்பாரா   ஆரூரர் .   இன்றிரவே   சேர்ப்போம் .  என்று    அருள்    வாக்கு    கிடைத்தது .     

No comments:

Post a Comment