Friday, 31 May 2019

ஈசன்  சேராமானுக்கு   தான்   கனக   சபையில்   சுந்தரர்      தம்மை   மகிழ்விக்க   பாடிய   பாக்களில்   மயங்கி   லயித்து   விட்டதால்   சலங்கை   ஒலி   கேட்க   தாமதம்   என்று   விளக்கினார் .  அதைக்கேட்ட   சேரமான்   ஐயன்   தம்   அடியார்களிடம்   வைத்துள்ள   அன்பை      எண்ணி       மிக்க    அதிசயம்   அடைந்தார் .  அத்துடன்   சுந்தரரையும்   காண   பேராவல்   கொண்டார் .   உடனே புறப்பட்டு       பொன்னம்பலத்தை   அடைந்தார் .  ஆனால்   சுந்தரர்  கிளம்பி       சென்று   விட்டதால்   அங்கு   ஆனந்த   தாண்டவம்   புரியும்   அம்பலவாணன்   மீது   பொன்வண்ணத்தந்தாதி   பாடி   மகிழ்ந்தார் .  மகிழ்ந்த   எம்பெருமான்   சிலம்பொலி   கேட்க   செய்து   சேரமானை   பரவசத்தில்   ஆழ்த்தினார் .    சுந்தரர்   திருவாரூர்    சென்று   விட்டதை    அறிந்த   சேரமான்      ஆரூர்   சென்றார்    

No comments:

Post a Comment