Monday, 13 May 2019

ஈசனே   தன்   திருவிளையாடலை   தொடங்கியபின்   பரஞ்சோதி  அடிகளுக்கு   வேறு   அடியார்   கிடைப்பாரா ?   மனசோர்வோடு   வந்த   கணவனை   கண்ட   திருவெண்காட்டு   நங்கையார்   அடியார்   ஒருவர்   வந்ததையும்   தனியாக   பெண்கள்   இருக்கும்   இல்லத்தில்   தாம்   நுழைவதற்கு   இல்லை   என் றும்   கோவிலில்   காத்திருப்பதாகவும்   சொன்ன   விவரத்தை   சொன்னார் .  மகிழ்ந்த   அடிகளார்   கோவிலுக்கு   விரைந்தார் .   அவரை   மரியாதையுடன்   அழைத்து   வந்தார் .   பைரவர்   உருவில்   வந்த   எம்பெருமான்   உம்மைப்பற்றி   கேள்விப்பட்டிருக்கிறேன் .  அதனால்   உம்மை   காண   வந்தேன் .  ஆனால்   எனக்கு   உணவளிக்க   உம்மால்   ஆகாது .  என்று   கூறினார் .  திடுக்கிட்ட   அடிகளார்   அப்படி   சொல்லாதீர்கள் .  எப்படிப்பட்ட   உணவானாலும்   அளிக்கிறேன்   தயை   செய்து   சொல்லும்   என்று  வற்புறுத்தினார் .   உடனே   ஈசன்   நான்   வட   தேசத்தவன் .   நான்   ஆறு   மாதத்திற்கு   ஒரு   முறைதான்   உணவு  அருந்துவேன் .  அதுவும்  பசுமாமிசம்தான்  .என்றார் .   

No comments:

Post a Comment