ஈசனே தன் திருவிளையாடலை தொடங்கியபின் பரஞ்சோதி அடிகளுக்கு வேறு அடியார் கிடைப்பாரா ? மனசோர்வோடு வந்த கணவனை கண்ட திருவெண்காட்டு நங்கையார் அடியார் ஒருவர் வந்ததையும் தனியாக பெண்கள் இருக்கும் இல்லத்தில் தாம் நுழைவதற்கு இல்லை என் றும் கோவிலில் காத்திருப்பதாகவும் சொன்ன விவரத்தை சொன்னார் . மகிழ்ந்த அடிகளார் கோவிலுக்கு விரைந்தார் . அவரை மரியாதையுடன் அழைத்து வந்தார் . பைரவர் உருவில் வந்த எம்பெருமான் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . அதனால் உம்மை காண வந்தேன் . ஆனால் எனக்கு உணவளிக்க உம்மால் ஆகாது . என்று கூறினார் . திடுக்கிட்ட அடிகளார் அப்படி சொல்லாதீர்கள் . எப்படிப்பட்ட உணவானாலும் அளிக்கிறேன் தயை செய்து சொல்லும் என்று வற்புறுத்தினார் . உடனே ஈசன் நான் வட தேசத்தவன் . நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு அருந்துவேன் . அதுவும் பசுமாமிசம்தான் .என்றார் .
No comments:
Post a Comment