Wednesday, 29 May 2019

உடனே   அமைச்சரை   அழைத்து    பொன்னும்  மணியும்   ஆடைகள்   கொண்டு   வர   செய்து   பாணபத்தரிடம்   எம்பெருமான்   திரு   உள்ளபடி   இவற்றை   சமர்ப்பிக்கிறேன் .  இன்னும்   இவ்வரசு   உரிமையையும்   தர   சித்தமாக  உள்ளேன்   என்று   கூறினார் .  பத்தர்   அரசருக்கு   ஈசன்   அடியார்களிடம்    உள்ள     தன்னலமற்ற   அன்பை   கண்டு   மெயசிலிர்த்து   போனார் .   பேச   வாயெழவில்லை .   ஐயனே   எனக்கு   தேவையான   அளவு   திரவியம்   எடுத்துக்கொள்ளவே   ஈசன்   ஆணை .  ஆகவே   வேண்டியதை   எடுத்துக்கொள்கிறேன்   என்று   சொல்லி   அவ்வாறே   செய்தார்   பத்தர் .  அவரை   நகர   எல்லைவரை   வந்து   வழி   அனுப்பினார்   சேரமான் .

No comments:

Post a Comment