Monday, 6 May 2019

மனம்   நெகிழ்ந்த   மாமல்லன்   கண்கள்   கலங்க     சேனாதிபதியை   வணங்கி   'ஐயனே   இனியும்   உம்மை  சேவகனாக   கருத   என்   மனம்   இடமளிக்கவில்லை .  மன   தூய்மையோடு   நான்   வழங்கும்   இவைகளை   ஏற்று   கொண்டு   உம்   இறைத்தொண்டை    தொடர   வேண்டுகிறேன்' என்று    சொல்லி   பொன்னும்   பொருளும்   அவர்   பாதங்களில்   சமர்ப்பித்தான் .   பரஞ்சோதியார்   அவைகளை   பெற்றுக்கொண்டு   தம்  சொந்த   ஊரான   திருச்செங்காட்டங்குடி   வந்தடைந்தார் .   அங்கு   தங்கி   மனைவியருடன்   தம்   இறைத்தொண்டை     மனமகிழ்வோடு  தொடங்கினார் .   இப்படி   இருக்கையில்   அத்தம்பதியருக்கு   ஒரு    ஆண்   குழந்தை   பிறந்தது .  அதற்கு   சீராளன்   என்று   பெயர்     சூட்டி   அருமை  பெருமையுடன்   வளர்த்து   வந்தனர் .  ஆளுடை   பிள்ளையரான   சம்பந்தர்   அந்த       பக்கம்   விஜயம்   செய்த   போது   அவரை   தம்   இல்லத்தில்   தங்க  வைத்து   அமுது   செய்வித்து   பரமானந்தம்    அடைந்தார்   சிறுத்தொண்டராகிய    பரஞ்சோதியார் .  சம்பந்தப்பெருமான்    அவர்  பெருமையை   'பைன்கோட்டூ   மலர்ப்புன்னை '  எனும்   பதிகத்தில்  சிறப்பித்து    பாடியுள்ளார் .

No comments:

Post a Comment