Thursday, 23 May 2019

அரண்மனை   அடைந்த   சேரமான்   தன்   அடியார்   தொண்டிற்கு   எக்குறை  வராமல்   அரச   காரியங்களையும்   இனிதே   நிறைவேற்றி   மக்களை   செம்மையே   வழிநடத்தினார் .  தில்லையில்   ஆனந்த   கூத்தாடும்   அம்பலவாணனிடம்    எல்லையற்ற   பக்தி   கொண்டு   தினமும்   அவரை   பூஜித்து   வந்தார் .   இறைவனும்      பக்தன்   பால்   அளவற்ற   பாசம்கொண்டு   பூஜையின்   முடிவில்  தன்   பாத   சிலம்பொலி   கேட்கும்படி   அருள்   செய்து   வந்தார் .   இவ்வாறு   இருக்கையில்   மதுரையில்   சோமசுந்தர   பெருமானிடம்   மிக   பக்தியுடன்   தன்   இன்னிசையால்   ஈசனை   ஆராதித்து   கொண்டு   பாணபத்தர்   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு   இரங்கிய   ஐயன்   அவருக்கு   உதவ   எண்ணி   அவர்   கனவில்   தோன்றி   '  உனக்கு   பொன்   பொருள்   கொடுத்து   உதவ   சொல்லி   சேராமனுக்கு   திருமுகம்    கொடுக்கிறோம் .     தாமதிக்காது      அவரிடம்   அதை   காட்டி   பொருள்  பெற்றுக்கொள்ளும்   என்று   கூறி   திருமுகத்தை   கொடுத்து   மறைந்தார் .

No comments:

Post a Comment