அரண்மனை அடைந்த சேரமான் தன் அடியார் தொண்டிற்கு எக்குறை வராமல் அரச காரியங்களையும் இனிதே நிறைவேற்றி மக்களை செம்மையே வழிநடத்தினார் . தில்லையில் ஆனந்த கூத்தாடும் அம்பலவாணனிடம் எல்லையற்ற பக்தி கொண்டு தினமும் அவரை பூஜித்து வந்தார் . இறைவனும் பக்தன் பால் அளவற்ற பாசம்கொண்டு பூஜையின் முடிவில் தன் பாத சிலம்பொலி கேட்கும்படி அருள் செய்து வந்தார் . இவ்வாறு இருக்கையில் மதுரையில் சோமசுந்தர பெருமானிடம் மிக பக்தியுடன் தன் இன்னிசையால் ஈசனை ஆராதித்து கொண்டு பாணபத்தர் என்பவர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு இரங்கிய ஐயன் அவருக்கு உதவ எண்ணி அவர் கனவில் தோன்றி ' உனக்கு பொன் பொருள் கொடுத்து உதவ சொல்லி சேராமனுக்கு திருமுகம் கொடுக்கிறோம் . தாமதிக்காது அவரிடம் அதை காட்டி பொருள் பெற்றுக்கொள்ளும் என்று கூறி திருமுகத்தை கொடுத்து மறைந்தார் .
No comments:
Post a Comment