Wednesday, 29 May 2019

 பாணபத்திரர்   மறுநாளே   மதுரையை   விட்டு   கிளம்பி    கொடுங்கோளூர்   சென்றார் .  அரண்மனை   சென்று   சேரமானை   சந்தித்து   ஐயன்   திருஉள்ளத்தை   தெரிவித்து   அவர்   கொடுத்த   ஓலையையும்   கொடுத்தார்.   அதை   வாங்கி   தலைமேல்   வைத்து   கண்களில்   ஒற்றிக்கொண்டு   அதை   படித்தார் .  அவருக்கு   ஆனந்தம்  தாளவில்லை .  'என்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   திருமுகம்   கொடுத்து   அனுப்பினாயே  .உன்   கருணையை   என்சொல்லி   போற்றுவேன் .  என்று   மெய்யுருக   தொழுதார் .  ஓலையை   மீண்டும்   மீண்டும்   படித்து   மேனி   சிலிர்த்தார் . சந்தோஷம்   தாங்காமல்   கூத்தாடினார் .

No comments:

Post a Comment