பாணபத்திரர் மறுநாளே மதுரையை விட்டு கிளம்பி கொடுங்கோளூர் சென்றார் . அரண்மனை சென்று சேரமானை சந்தித்து ஐயன் திருஉள்ளத்தை தெரிவித்து அவர் கொடுத்த ஓலையையும் கொடுத்தார். அதை வாங்கி தலைமேல் வைத்து கண்களில் ஒற்றிக்கொண்டு அதை படித்தார் . அவருக்கு ஆனந்தம் தாளவில்லை . 'என்னையும் ஒரு பொருட்டாக மதித்து திருமுகம் கொடுத்து அனுப்பினாயே .உன் கருணையை என்சொல்லி போற்றுவேன் . என்று மெய்யுருக தொழுதார் . ஓலையை மீண்டும் மீண்டும் படித்து மேனி சிலிர்த்தார் . சந்தோஷம் தாங்காமல் கூத்தாடினார் .
No comments:
Post a Comment