Thursday, 9 May 2019

இவ்வாறு   சிருட்தொண்டர்   மனைவி   மகனுடன்   தம்   இறைத்தொண்டை   செவ்வனே   செய்து   கொண்டு   வாழ்ந்து   வரும்   நாளில்   ஐயன்   அவர்களை   சோதித்து   ஆட்கொள்ள   எண்ணியவராய்   பைரவர்   வேடம்   தாங்கி   தொண்டரை   தேடி    திருச்செங்காட்டங்குடி   வந்தார் .    அவர்   இல்லத்தை   அடைந்து   தாதி   சந்தண நங்கையிடம்    தினம்   சிவனடியார்களுக்கு   அமுது   வழங்கும்   சிறுத்தொண்டர்   வீடு   இதுவா?  என்று   வினவினார் .  அவள்   பதில்   சொல்வதை   கேட்டு   தொண்டரின்   மனைவி   திருவெண்காட்டு   நங்கை   வெளியில்   வந்து   பைரவர்   வேடம்   தரித்து   வந்த   ஐயனை   இனம்   காண   முடியாதவளாய்    அவர்   அமுது   படைக்க   அடியாரை   தேடி   சென்றிருப்பதாகவும்   உள்ளே   வந்து   அமரும்படியும்   கூறினாள் .    ஈசன்   பெண்கள்     தனியே    இருக்குமிடத்துக்கு   தாம்   வர   இயலாது   என்றும்   ஆலயம்   சென்று   அங்கு   ஆத்தி   மரத்தடியில்   காத்திருப்பதாகவும்   அவள்   கணவரை    அங்கு  அனுப்ப   கூறினர் .    

No comments:

Post a Comment