இவ்வாறு சிருட்தொண்டர் மனைவி மகனுடன் தம் இறைத்தொண்டை செவ்வனே செய்து கொண்டு வாழ்ந்து வரும் நாளில் ஐயன் அவர்களை சோதித்து ஆட்கொள்ள எண்ணியவராய் பைரவர் வேடம் தாங்கி தொண்டரை தேடி திருச்செங்காட்டங்குடி வந்தார் . அவர் இல்லத்தை அடைந்து தாதி சந்தண நங்கையிடம் தினம் சிவனடியார்களுக்கு அமுது வழங்கும் சிறுத்தொண்டர் வீடு இதுவா? என்று வினவினார் . அவள் பதில் சொல்வதை கேட்டு தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கை வெளியில் வந்து பைரவர் வேடம் தரித்து வந்த ஐயனை இனம் காண முடியாதவளாய் அவர் அமுது படைக்க அடியாரை தேடி சென்றிருப்பதாகவும் உள்ளே வந்து அமரும்படியும் கூறினாள் . ஈசன் பெண்கள் தனியே இருக்குமிடத்துக்கு தாம் வர இயலாது என்றும் ஆலயம் சென்று அங்கு ஆத்தி மரத்தடியில் காத்திருப்பதாகவும் அவள் கணவரை அங்கு அனுப்ப கூறினர் .
No comments:
Post a Comment